பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன? ஏன்? எப்படி?

தமிழ் மக்கள் தமிழர் பாதுகாப்புப் பேரவைக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து, முறையான வழியில் தமிழக அரசைத் தூண்டுகின்ற வேகத்தைப் பொருத்தது இதன் பலன். தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், இம்முறை அமுலுக்கு வந்தால், இந்தி படிக்க வேண்டிய தேவை யிருக்காது. மத்திய அரசும் அந்தந்த மாநிலத் தில் அந்தந்த மாநிலத்தவர்க்கே வேலையைக் கொடுத் தால், ஆற்றாமை, பொறாமை உணர்வுகள் அகலும்!

நம் நாட்டில் மக்கள் ஆட்சி நடக்கிறதென்று உண்மை யாகவே நம்புகிறீர்களா? அதிகாரிகள் மக்களை அலைக்கழிக்கும் கொடுமையைப் பார்த்தால் இது மக்களாட்சி நடக்கும் நாடாகத் தெரிய வில்லை. அதிகாரிகள் மக்களைக் கண்ணியமாக நடத் தும் நாள் என்று வருகிறதோ அன்றுதான் இது மக்க ளாட்சி நடக்கும் நாடாக உண்மையில் கருத முடியும். மாநில சுயாட்சி ஏற்படும் வரை நாம் உண்மையான மக்கள் ஆட்சியைப் பார்க்க முடியாது. -

திறமையுள்ளவர்களுக்கே வாய்ப்பு என்ற கொள் கையைத் தவறென்று கருதுகிறீர்களா? வாய்ப்புப் பெற்றவர்கள் திறமை யுள்ளவர்களர்கிறார் கள். திறமையுள்ளவர்கள் மேலும் வாய்ப்புப் பெறு கிறார்கள். இவ்வாறு ஒரு சாரார் உயர்ந்து கொண்டே போக பிறிதொரு சாரார் பின்தங்கி விடுகிறார்கள். பின் தங்கியவர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்தால் தான் அவர் களின் திறமையை வளர்க்க முடியும். வாய்ப்பே கொடுக் காமல் திறமையற்றவர்கள் என்று ஒதுக்குவது, பின் தங்கியவர்களுக்குச் செய்யும் கொடுமையாகும். இக் கொடுமை நிகழும் வரை நாம் பேசுகின்ற சமத்துவக் கொள்கைகள் அனைத்தும் விழலேயாகும்.