பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 37

O

Ο

பணப்புழக்கம் பெருகுவதால் நன்மையா? தீமையா? பொருளாதார வல்லுநர்கள் அதனால் நன்மைகளே மிகுதியென்று சான்று காட்டி வாதாடுகின்றனர். அனு பவத்தில் பார்க்கும் போது பணப்பெருக்கம் பல தீமை களுக்கே பிறப்பிடமாக வுள்ளது. ஆளுவோர்க்கு சில பிரச்சினைகளைத் தீர்க்க பணப்பெருக்கம் கைகொடுக் கின்றது. ஆனால், மக்களுக்கு, அதுவும் நடுத்தர, ஏழை மக்களுக்கு அது பெருந் துன்பம் தருவதையே அனுபவத் தில் பார்க்கிறோம். வல்லரசுகளின் அணு குண்டிற்கும் இந்திய நாட்டின் அணு குண்டிற்கும் உள்ள வேற்றுமை என்ன? வல்லரசுகள் பிறநாடுகளை அச்சுறுத்த அணுகுண்டு களைச் செய்து கட்டிக் காத்து வருகின்றன. இந்திய விஞ்ஞானிகள், அணுகுண்டைக் கொண்டு நாட்டுக்கு என்ன செய்யலாம் என்ற முறையில் சிந்தித்து வருகிறார் கள். நீரில்லாப் பகுதிகளுக்கு ஆறுகளைத் திருப்ப அணு குண்டு பயன்படும் என்று கருதுகின்றனர்.

ஆண்களை விடப் பெண்கள் எல்லாத் துறையிலும் முன்

னேறி வருவதற்குக் காரணம் என்ன? விடுதலையுணர்வுதான் காரணம். அடிமை நிலை யிலிருந்து விடுபட்ட பெண்கள், ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருகிறார்கள். ஆட்சித் துறையிலும் விரை வில் பெண்கள் ஆதிக்கம் வரக்கூடும். அது சரிபாதியா யிருப்பதே நல்லது. - இன்று தமிழ்நாட்டில் சிறந்த சொற்பொழிவாளர் யார்? தமிழக முதல்வர் கலைஞரும், சிலம்புச் செல்வர் ம. பொ. சி. யும்! அழகிய உவமைகள் கலைஞர் சொற் பொழிவை அணி செய்கின்றன. சிறந்த எடுத்துக்காட்டு கள் சிலம்புச் செல்வரின் பேச்சுக்கு மெருகூட்டுகின்றன.