பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

என்ன? ஏன்? எப்படி?

பாகிஸ்தான் அணுக்குண்டு தயாரிக்குமா? அணுக்குண்டு ரகசியங்கள் வெடிப்பதற்கு முன் வெளிப் படுத்தப் படுவதில்லை. பாகிஸ்தான் தயாரித்துக் கொண்டு மிருக்கலாம். தயாரித்த குண்டுகளை வாங்கி அடுக்கி வைத்துக் கொண்டும் இருக்கலாம்.

உலகச் சிந்தனையாளர்களிலே ஒப்பற்ற பெரியார் யார்? பெரியார்தான்! ஒவ்வொரு சிந்தனையாளரும் ஒவ் வொரு கருத்து பற்றியே சிந்தித்தார்கள். மனிதன் மணி தனாக வாழ எல்லா வகையான கருத்துக்களையும் சிந்தித்து அவற்றிற்குக் காலகாலத்துக்கும் மாறாத தெளிவான முடிவுகளை வெளியிட்டவர் பெரியாரைத் தவிர வேறு யாரும் இல்லை.

சுதந்திர இந்தியாவில் தமிழர்களின் நிலை எப்படியிருக் கிறது? சாதியைக் காப்பாற்றத் தமிழன் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு கிளம்புகிறான். பிளாட்பாரம் பிள்ளை யாரைக் காப்பாற்ற ஆவேசமாகக் கிளம்புகிறான். சுண்டைக்காய் நாட்டுக்குத் தன் மண்ணைப் பறி கொடுத்துவிட்டுச் சுண்டுவிரலை ஆட்டக்கூடத் தெம் பின்றித் தெருவில் நிற்கின்றான்.

இந்தியாவின் அணுகுண்டு சோதனை பற்றி மற்ற நாடு கள் பொறாமைப்படுவானேன்? இந்தியா பின் தங்கியிருந்தால் தங்கள் வாணிபச் சந்தைக்கு வாய்ப்பாக இருக்குமே என்று எதிர்பார்த்த பிற நாடுகள், அது முன்னேறுவது கண்டு வயிறு எரி கின்றன. யார் என்ன எதிர்பார்த்தாலும், நம்நாடு முன் னேற்றப் பாதையில் நடைபோடுவதைத் தடுக்க முடி யாது.