பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 39

Q

இந்தியா ஏழை நாடுதானே?

விரைவில் பணக்கார நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. விலைவாசிகள் ஏறுவதற்கு அரசாங்கம் நாள்தோறும் ஊக்கம் அளித்துக் கொண்டிருக்கிறது. எட்டிப் பிடிக்க முடியாத ஏழைகள் பட்டினியால் செத்தொழிந்த பின்

மிஞ்சுவது பணக்காரர்கள் தான்! ஆம் அந்த்ப் பணக்

காரர்கள் கம்யூனிஸம் பேசிக்கொண்டு பங்களாக்களிலே வாழ்வார்கள். நீங்கள் தேசத்திற்காக என்ன செய்திருக்கிறீர்கள்? ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க முடியாதவர்கள், தன்னல வாதிகளாகத் தான் இருக்க வேண்டும். சிறை சென்றவர்கள் மட்டும்தான் நாட்டுத் தொண்டர்கள் என்று நினைப்பதும் தவறு. நல்ல குடிமக்களை உருவாக்கப் பாட்டெழுதும் கவிஞனும் நாட்டுத் தொண் டனே; அணுவாற்றலை ஆராய்ந்து வெளிப்படுத்தும் விஞ்ஞானியும் நாட்டுத் தொண்டனே!

புதுவைக்குத் தனியாக ஒர் அரசு இருக்க வேண்டியது அவசியந்தானா? தேவையில்லை. மத்திய அரசு, தமிழ் நாட்டுக்குத் தொந் தரவு கொடுப்பதற்காக புதுவையை ஒரு தனியரசாக வைத்துக் கொண்டிருக்கிறது. நாட்டு நலக் கண்ணோட் டத்துடன் நோக்கினால், புதுவையைத் தமிழ்நாட்டுடன் சேர்த்து விடுவது தான் செய்யத் தக்கதாகும்.

தமிழ் நாட்டில் இந்திப் படங்கள் அதிகநாள் ஓடுவதன் மர்மம் என்ன? - இதில் என்ன மர்மம் இருக்கிறது. மர்மத்துக்கே இடமில் லாமல் எல்லாவற்றையும் காட்டுகிறார்களே?