பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 41

Ο

பவர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பதோடு பாராட்டுப் பத்திரமும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் என்ன செய்தாலும் பாராட்டப் படுகிறார் என்றால் அவரே தவறு செய்யாத மனிதர் ஆவார்.

இலஞ்சம் என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தது யார்? இதை எந்த நாட்டினர் அதிகமாகப் பின் பற்றினார்கள்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், இயேசுநாதரின் சீடனாக இருந்த யூதாஸ் என்பவன் முப்பது வெள்ளிக் காசுகளைக் கைக்கூலியாகப் பெற்றுக் கொண்டு எதிரி களுக்கு இயேசு நாதரை அடையாளம் காட்டினான். இதுதான் வரலாற்றில் காணப்படும் மிகப் பழைய செய்தி. ஆனால் முதன்முதலில் யாரால் கண்டுபிடிக்கப் பட்டது என்பதற்கு சரியான குறிப்புகள் எதுவும்

.கிடைக்கவில்லை.

வியாசர் விருந்து எழுதிய ராஜாஜி கலப்புத் திருமணத்தை ஆதரித்தாரா? தம் மகளுக்குச் செய்திருக்கிறாரே! காந்தியடிகளின் மகனுக்குத் தம் மகளைக் கொடுத்தவராயிற்றே இராஜாஜி.

படிக்கும்போதே பள்ளியில் மாணவர்களுக்குத் தொழிற் பயிற்சியும் அளித்தால் என்ன? - -

இரசாயன, பெளதிகப் பாடத்திற்குரிய கருவிகளையும் அமிலங்களையும் வாங்கி வைக்கவே இப்போது திண்டாட்டமாயிருக்கிறது. தொழிற் பொறிகளையும் கருவிகளையும் வாங்கி வைத்துக் கொண்டு தொழிற் கல்வி தொடங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மீண்டும் மீண்டும் உயர்வு கொடுப்பதற்குப் பணம்