பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•

என்ன? ஏன்? எப்படி?

கிடைப்பதுபோல் இதற்குப் பணம் கிடைத்தால் நல்லது. அரசு இதற்கொரு திட்டம் வகுக்க வேண்டும்.

மாநாடுகள், கூட்டங்கள் இவையெல்லாம் நம் நாட் டுக்குத் தேவைதானா?

மனிதர்களில் உங்களைப் போல வெறுப்பு மனம்படைத்

தவர்கள் என்று ஒரு வகையினர் இருக்கிறார்கள். இவர் களுக்கு எந்தச் செயலும் வீண் செயலாகவே, தோன்றும். வயிறு நிறைய சோறு உண்பதுகூட வீண் என்றுதான் இவர்களுக்குத் தோன்றும். எதையும் வீண் வீண் என்று தள்ளுபவர்கள் வாழ்வில் சுவையே இருக்காது.

கள்ளக் கடத்தல் இப்போது குறைந்து விட்டதா? கள்ளக் கடத்தல் எப்பொழுது கூடியிருந்தது எப்பொழுது குறைந்திருந்தது என்பதெல்லாம் மூடுமந்திரமாகவே இருக்கிறது. அரசு கள்ளக் கடத்தல்காரர்களை வேட்டை பாடிப் பிடிக்கின்றபோதுதான், அது இந்த நாட்டில் எவ்வளவு வேரூன்றி வளர்ந்திருக்கிறது என்று மக்களுக்குச் சிறிது புரியத் தொடங்கியிருக்கிறது. அரசு தீவிர நடவடிக்கையெடுக்கும் போதெல்லாம், அது இம் மாதிரியான வேலைகளைச் செய்யாமல் எவ்வளவு காலம் துரங்கிக் கொண்டிருந்தது என்பதை அறிய

முடிகிறது.

தற்காப்புக்காக ஒவ்வொருவரும் ஆயுதம் வைத்துக் கொண்டால் என்ன?

அது தற்காப்புக்காகத்தான் பயன்படும் என்று கருத முடியாது. ஏனெனில், மனிதர்களில் மகாத்மாக்கள் ஆயிரத்துக்கொருவர், இலட்சத்துக்கொருவர் தாம் காணப்படுகிறார்கள். அந்த மகாத்மாக்களிலும் : உண்மையான மகாத்மாக்கள் ஆயிரத்துக் கொருவரே