44
என்ன? ஏன்? எப்படி
பணத்தை சேர்த்துக் கொண்டவன் அத்தோடு அமைதி யடைவதில்லை. செல்வாக்கும் தேடிக்கொள்ள விரும்பு கிறான். இதற்குக் கடத்தல்காரர்கள் விதிவிலக்கல்ல.
மலை அளவு விலை உயர்ந்துள்ள இக்காலத்தில் திரைப் படங்களுக்கு மட்டும் கூட்டம் குறையவில்லையே? நீங்கள் முதல் நாள் ஆசாமிபோல் இருக்கிறது. பொதுவாக திரைப்படங்களுக்கு கூட்டம் இருப்ப தில்லை. நூறுநாள் ஒடும் படங்கள் பெரும்பாலும் காலி நாற்காலிகளுக்கே ஓடுகின்றன.
இரண்டு நடிகர்கள் ஒருவரையொருவர் மோதிக் கொள் கிறார்களே ஏன்? ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு லாபம். ஊரை இரண்டாக்குவதற்காக இந்தக் கூத்தாடிகள் மோதிக் கொள்ளுகிறார்கள். எதற்கு? தங்கள் லாபத்துக்கு.
இந்தியாவின் அணு சக்தி இரகசியங்கள் திருட்டுப் போய் விட்டனவாமே?
இந்திய அரசின் எல்லாத் துறைகளிலும் துரோகிகள் ஊடுருவியிருக்கிறார்கள். அவர்கள் பகை நாடுகளுக்கு உதவுகிறார்கள்; கள்ளக் கடத்தல் காரர்களுக்கு உதவு கிறார்கள். கள்ளச் சந்தைக்காரர்களுக்கு உதவுகிறார் கள். மொத்தத்தில் நம் நாட்டைக் கெடுத்துக் கொண் டிருக்கிறார்கள். நாம் வலுவான ஓர் அரசு இயங்குவதாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.