பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$0

Ο

s

என்ன? ஏன்? எப்படி?

நாய் கடிக்க வரும்போது கல்லைத் தேடினால் அகப்பட வில்லை. கல் இருக்கும்போது அடிப்பதற்கு நாய் அகப் படவில்லை. இது ஒரு பொருள்.

சிற்பி கல்லில் செதுக்கிய நாயை நாயென்று எண்ணிப் பார்க்கும்போது அது கல்லால் ஆனது என் பதை மறந்துவிடுகின்றோம்.

அது கல்லென்று எண்ணிப் பார்க்கும்போது நாயை மறந்து விடுகின்றோம். இது சிறந்த பொருள். தெய்வச் சிலைகளைத் தெய்வமென்று நினைப்பதும், கல்லென்று நினைப்பதும் நினைப்பார் கருத்தையும் உணர்வையும் பொருத்தது என்ற நுண்பொருளுக்கு இது எடுத்துக் காட்டாகும்.

தெய்வம் எங்கேயிருக்கிறது?

உண்மையான அன்புள்ளத்தை தெய்வம் உறைவிட மாகக் கொண்டுள்ளது. ஆரவாரம் உள்ள இடத்தில் அது தங்காமல் ஒடிப் போகிறது. மாடக்கோயில்களைவிட மனக்கோயில்களையே தெய்வம்விரும்பிக் குடியேறுகிறது.

இந்து மதத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க ஈ.வே.ரா. கடவுள்களின் ஆபாசங்களை மட்டும் ஏன் எடுத்துக் காட்டவேண்டும்? ஒருவன் யோக்கியனாயிருக்க அவன் வணங்கும் கடவுளும் யோக்கியமானதாக இருக்கவேண்டும்; யோக்கிதையில் லாத கடவுள்களை வணங்கினால், வணங்குபவனுக்கு யோக்கியமான எண்ணங்கள் உண்டாகாது என்றுதான் பெரியார் சொல்லுகிறார்.

பெரியார் தோன்றியிராவிட்டால்...?

சுதந்திர பாரதத்தில் நாம் நந்தனார்களாய் நடமாடிக் கொண்டிருப்போம்!