பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி, இலக்கியம் 69

O வயிற்றுப் பசிக்குச் சோறுதானே வேண்டும். அது தாயின் கையால் தான் தரவேண்டுமென்று பிள்ளை அழுகிறதே அது வெறியா? அந்த உணவைத் தூயதாக உண்ண வேண்டும் என்று நினைக்கிறோமே அது வெறியா? பற்றும் பாசமும் வெறியாகா!

0 தமிழில் நல்ல நாடகங்கள் இல்லாமல் போனதற்கு யார்

காரணம்?

O திரைப்படங்களே காரணம். மக்கள் திரைப்படங்களுக்கே செல்வதால், நாடகங்கள் வளர்ச்சியடைய வழி யில்லாமல் இருக்கிறது.

0 தமிழ் நூல்களை முதன் முதலில் அச்சிற் பதிப்பித்தவர்

uufrff?

O யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர். இவர் சைவ நூல்களை யெல்லாம் தேடிக் கண்டு பிடித்து ஒரு பிழை கூட இல்லாமல் செம்மையாக அச்சிற் பதிப்பித்தார். தமிழும் சைவமும் தம் இரு கண்கள் போல எண்ணிப் போற்றிய பெருநாவலர் இவர்.

0 தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் சிலர் ஆங்கிலத்

திலேயே பேசுகிறார்களே!

O இந்தியா நூறு ஆண்டுகள் அடிமையாக இருந்த நாடல்லவா? ஒரு சிலருடைய வம்சா வழியில் ஊறிய அடிமைத் தனம் நீங்க இன்னும் காலம் பிடிக்கும். தமிழன் தமிழில் பேசுவது தான் நாகரிகம். ஆங்கிலத்தில் பேசுவது அநாகரிகம். இந்தியில் பேசுவதும் இது போன்றதே!

0 ஒரு தம்பி எப்படியிருக்க வேண்டும்?