பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி, இலக்கியம் 73

இளங்கோவடிகள் விஞ்ஞானியல்லர்: தமிழ்ப் புலவரே. கண்ணகியின் நெஞ்சக் கொதிப்பை இவ்வாறு மிகைப் படுத்திக் கூறுகிறார்.

இன்று தமிழ் நாட்டில் வாழும் கவிஞர்களில் சிறந்தவர் u Ifrr#2 புகழுடன் விளங்குபவர்களில் ஒருவர்ை நாம் சிறந்த கவிஞர் என்று கூறிவிட முடியாது. வெளியில் தெரியா மல் இருக்கின்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.எல்லோரும் வெளிப்பட்டால்தான், யார் சிறந்தவர் என்று தேர்ந் தெடுக்க முடியும்,

இலக்கியத்தில் அண்ணா சிறந்தவரா? கலைஞர் சிறந்தவரா? .

தேன் இனிப்பா? பால் இனிப்பா?

தமிழுக்கு வசன கவிதை தேவையா? உறுதியாகத் தேவைதான். ஆனால், அது எப்படி அமைய வேண்டும் எண்பதில் தான் கருத்து வேறுபாடு இருக்கிறது. இனிய தமிழில், சிறந்த கருத்துடையதாய், கவிதையுணர்வை யுண்டாக்கும் ஆற்றலுடையதாய், இது கவிதையோ என மயக்கத்தக்கதாய் அமைவதே சிறந்த உரைநடைக் கவிதையாகும். கலைஞரும், கண்ணதாசனும் இத்துறையில் சிறந்த வெற்றி பெற்றிருக்கின்றனர்.

திருவாரூரில் நடைபெற்ற ஒரு விழாவில் தேவநேயப் பாவாணர் தொகுக்கும் அகராதிக்குக் கலைஞர் இரண்டு லட்சம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளார். பாவாணர் என்பவர் யார்? அவர் தொகுக்கும் அகராதி யின் சிறப்பு என்ன?