பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

என்ன? ஏன்? எப்படி?

களை முறையான தன்மையில் பேசவேண்டும். அதனால் மேடை ஏறும்போது ஏதும் தவறு வருமோ என்று மனம் நடுங்குகிறது. ஆன்ால், பல மேடைகளில் முறைகெட்டுப் பேசும் பல அரசியல்வாதிகளைச் சந்திக்கிறோமேஅவற்றை வைத்துக் கொண்டு நாம் மேடைகளைப் பற்றி முடிவு கட்டக் கூடாது. நல்லவர்கள்போல் நடிப்பவர்களை எதற்கு ஒப்பிடு வீர்கள்? கானல் நீருக்கு. பாலைவனத்துக் கானல் நம் கண்ணுக்கு நீர்ப்பரப்பு போல் தோற்றமளிக்கும். நெருங்கிச் சென்றால் மேலும் தொலைவில் அத்தோற்றம் சென்று விடும். தொடர்ந்து ஏமாற்றத்தையே அது தந்து கொண்டிருக்கும். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வேகமடையவில்லையே, ஏன்? மூடநம்பிக்கைதான் காரணம். ஓர் உயிரை உண்டாக்க முடியாத நாம். உண்டாகும் உயிரைத் தடுத்து நிறுத்தலாமா என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், குடும்பக் கட்டுப்பாட்டின் வெற்றியில்தான் நாட்டின் தலைவிதி இருக்கிறது என்பதை மக்கள் மிக விரைவில் உணரப் போகிறார்கள். அப்போது மூடநம்பிக்கைகள் ஒடி ஒளிந்து விடும். நான் ஒரு நடிகையைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். பொதுப்பூங்காவில் மலர்ந்திருக்கும் பூக்களைப் பறிக்கக் கூடாது என்று பலகையில் எழுதி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்தப் பூக்களை எல்லோரும் பார்த்து மகிழலாம். பறித்துத் தன் உடைமையாக்கிக் கொள்ளக்கூடாது.