பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன? ஏன்? எப்படி?

தவிர்க்கவே அவர் தாடி வளர்த்தார். அது அவருக்கு அழகும் ஒளியும் சேர்ப்பதாய் அமைந்து விட்டது.

எனக்கு மறதி மிகுதியாயிருக்கிறது. அதைப் போக்க ஒரு வழி சொல்லுவீர்களா? பொதுவாக கவலையற்ற வாழ்வு நடத்துபவர்களிடமே மறதி குடிகொண்டிருக்கிறது. வாழ்க்கைக் கவலை யுள்ளவர்களுக்கு மறதி ஏற்படுவதில்லை. நினைவில் வைக்கவேண்டிய செய்திகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி அவற்றைத் திருப்பிப் பாருங்கள். மறதியை வென்று விடலாம். படித்துப் பார்க்க மட்டும் மறந்து விடாதீர்கள்.

நெடுநாள் அன்பாக ஒன்றாக இருந்தவர்கள் பகைத்துப் பிரிய நேரிடுவது எப்படி? பண்பு இருக்கும் வரை அன்பு இருக்கும். யாராவது ஒருவரிடத்தில் பண்பு குறையும்போது நண்பு முறிந்து விடும். கலப்பு மனத்தில் பிறந்த குழந்தைகள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்? தாய்ச் சாதியா? தகப்பன் சாதியா? சட்டசபையிலேயே இந்த ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார் கள். கலப்பு மணக் குழந்தைகளை தாய்ச் சாதியும் சேர்த்துச் கொள்ளாது. தகப்பன் சாதியும் சேர்த்துக் கொள்ளாது. அது தனிச் சாதியாக உருவாவது தவிர வேறு வழியில்லை. இந்துவாகவே இருந்து கொண்டு கலப்பு மணம் புரிந்து கொள்பவர்கள் நிலை பரிதாபத் திற்குரியது என்பது தான் உண்மை. இந்தத் தொல்லை ஒழிய கலப்பு மணத்தம்பதிகள் வேறு ம்தத்திற்கு மாறி விடுவதுதான் இன்றைய நிலையில் சிறந்த பரிகாரமா யிருக்கிறது.