பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 91

அஸ்ஸாம் மாநிலத்தில் பஞ்சம் பசி தாங்கமுடியாமல் குழந்தைகளை விற்கிறார்களாமே? இக்குழந்தைகளை வாங்குபவர்கள் என்ன செய்கிறார்கள்? சிலர் கொஞ்சிக் கொஞ்சி வளர்க்கிறார்கள். பலர், இவற்றைத் தங்களின் வாழ்நாள் அடிமைகளாகப் பழக்குகிறார்கள்.

மனிதன் செய்யக்கூடிய மிகப்பெரிய கொடுமை என்ன? இதுவரையில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் செய்துள்ள மிசுப்பெரிய கொடுமை அவனைக் கொலை செய்ததேயாகும். வெறியர்கள் தங்களுக்கு வேண் டாதவர்களைக் கொலை செய்தே தீர்த்துக் கட்டியிருக் கிறார்கள். 'கொன்றன்ன இன்னா என்பது திருக்குறள். அரசுதரும் மிகப்பெரிய தண்டனையும் கொலைத் தண்டனையே! கொலைத் தண்டனை கூடாது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.

சாதி ஒழிப்பில் முன்னின்றது.பெரியாரா காந்தியடிகளா?

காந்தியடிகள் செய்த மருத்துவம் நாட்டு மருத்துவம்: பெரியார் செய்வது அறுவை மருத்துவம்.

நான் ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலிக்கிறேன்? அவளும் என்னைக் காதலிக்கிறாள். எந்த முறையில் நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம்? முஸ்லீம்களின் முறையில் நிக்கா செய்வதானால் நீங்கள் ஒரு முஸ்லிமாக மாற வேண்டியிருக்கும். இந்து மதத்தில் மத விலக்குச் செய்ய இடமிருக்கிறதே தவிர பிற மதப் பெண்ணை இந்துவாக்கச் சடங்குகள் வகுக்கப்பட வில்லை. எனவே நீங்கள் இருவரும் சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்வதே சிறந்த வழி,