பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

O

O

என்ன? ஏன்? எப்படி?

சட்டத்துக்கும் அறத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? சரியான சிந்தனையின்படி அறத்தை நிலைநாட்ட சட்டம் பயன்பட வேண்டும். இன்றைய சட்டம்அப்படிப் பயன்படவில்ைை. சட்டம் வேறு: அறம்வேறு என்ற நிலையையே இன்று காண்கிறோம். எடுத்துக் காட்டாக சூதாடுவது அறமன்று. அரசாங்கமே சூதுக்களங்களைகுதிரைப் பந்தயங்களை நடத்தும் போது அது சட்டப்படி தவறாகக் கருதப்படுவதில்லை. அற நெறிப்படி மதுக் குடிப்பவன் குற்றவாளி. சட்டப்படி மதுவிலக்கு நடைமுறையில் இருந்தால்தான் அவன் குற்றவாளி; மதுவிலக்கு நிறுத்தி வைக்கப்படும்போது அவன் சட்டப்படி குற்றவாளியல்ல.

கலப்பு மணங்களை அரசு ஆதரிக்கிறது. ஆனால் வாழ்வில் இத்தம்பதிகள் பல துன்பங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறதே! கலப்பு மணங்கள் வெறும் ஆசைக்காகச் செய்யப் படுபவையல்ல. அவை ஒரு சிறந்த இலட்சியத்தை நடை முறைப்படுத்த நடப்பவை. இலட்சியவாதிகள் துன்பங் களை மதிப்பவர்களல்லர்.

பிள்ளையில்லாதவர்களுக்குப் பாசம் இருப்பதில்லையா? பாசம் இருப்பவர்களுக்குப் பிள்ளையில்லாவிட்டால். அந்தப் பாசம் மற்றவர்களிடம் பாய்கிறது. பாசம் இல்லாதவர்களுக்குப் பிள்ளையில்லாவிட்டால், அது தன்னல வெறியை உண்டாக்குகிறது. பாசம் இல்லாதவர்களையும் பாசம் உடையவர்களாக மாற்றி விடுகின்றனர் பிள்ளைகள். எனக்குப் பகலில் தூக்கம் வருகிறது. இதனால் ஏதேனும் கெடுதல் உண்டா?