பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எடுத்துரைத்தார். முன்னவரும் ஆவன செய்வதாகச் சொன்னார். 2. அமர்த்த ப் படலம் பண்டகர் வரதராசலு அவர்கள் சென்னை சென்றபின் அரசவயவர் முத்தையா அவர்கள் திருமுகம் வந்தது. அதன் பின், யான் அண்ணாமலை நகர் செல்லும் நாள் அண்ணணித்தென்று எண்ணினேன். அரசவயவர் முத்தையா அவர்கள் தங்கள் தந்தையார் போன்றே தமிழ்ப்பற்று நிரம்பியவர்கள். ஆயின், பண்டாரகர் சேதுவும் பேராசிரியர் தெ. பொ. மீ. யும் (வேறொரு பிராமணப் பேராசிரியரும்) முத்தமிழ் வேங்கையரென்று கருதப்பட்டதனாலும், துணைக்கண் காணகர் திரு. நாராயணசாமி அவர்களின் அதிகார உரிமை மதிக்கப்பட வேண்டியிருந்ததனாலும் உடனடி யாய் என்னை அமர்த்த விரும்பவில்லை அதே சமயத்தில், அறிக்கழஞ்சு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் இருவரும் அரசியற் கட்சித் தலைவர் ஒருவரும் கூறிய பரிந்துரையைப் பொருட்படுத்தாதிருக்கவும் இயலவில்லை. இங்ஙனம் இருதலைக்கொள்ளி எறும்பு போல் இடர்ப்பட்ட தனால், நீண்ட நாளாக என்னை அமர்த்துவது அறத்தடு மாற்றமாகவேயிருந்தது. இந்நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கீழைக் கலைத்துறைத் தலைவரும் அருந்தமிழன்பரும் பெரும்பொறுப்பாளருமான பேராசிரியர் இலெ. பெ. கரு. இராம நாதன் அவர்களின் கருத்தை அரசவயவர் முத்தையா அவர்கள் கேட்டிருக்கின்றனர். பேராசிரியர் முற்றும் இசையவே, அரசவயவர் தடுமாற்றந் தீர்ந்திருக் கின்றது. அதன்பின் துணைக் கண்காணகரை இணக்கு