பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாளுக்கராகவும் இருக்கத் தெரிந்தவர் 173.

குறித்துக்கொள். ஏதாவது சொல்ல வேண்டுமென்ருல் பிறகு என்னிடம் சொல். கேட்டுக்கொள்கிறேன்' என்று சொன்னர். அவ்வாறு என்னைக் கடிந்துகொண்டது அந்த ஒரே முறைதான்.

பிறகு நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தோம். ஆசிரியர் என்னைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார். ராமதாசரிடமிருந்து ஏதாவது புதுச் செய்தி கிடைக்குமா என்று போனேன். அவர் தமக்குத் தெரிந்தவைகளையேதான் சொன்னர் என்ருலும் அவற்றை யெல்லாம் நாம் குறித்துக் கொண்டால், அவருக்கு நாம் அவரிடம் மதிப்பு வைத்திருக்கிருேம் என்ற எண்ணம் தோன்றும் உற்சாகத்தினல் பலவற்றைச் சொல்வார். அவை எல்லாம் நமக்குப் பயன்படாவிட்டாலும், அவற்றில் நமக்குப் பயன்படக் கூடிய ஒன்றிரண்டு செய்திகள் இருந்தால் போதுமே! கல உமியைத் தின்ருல்தான் ஒர் அவல் கிடைக்கும் என்ருலும், அந்த ஒ: அவலுக்காகக் கல உமியையும் தின்ன வேண்டிய அவசியம் நேரத் தான் நேர்கிறது. அதல்ைதான் நான் அந்த நேரம் உன்னிடம் சற்றுக் கோபமாகப் பேசிவிட்டேன்' என்ருர்.

அறியாமையினல் அந்த நேரம் நான் ஏதோ சொல்வி விட்டேன். மன்னிக்க வேண்டும்' என்று நான் கேட்டுக் கொண்டேன். எத்தனை பேர் ஒர் அவலுக்காகக் கல உமியை அருவருப்பு இல்லாமல் தின்னும் இயல்புடையவர்களாக இருப் பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆசிரியருடைய பொறு மையைக் கண்டு எனக்குப் பெரு வியப்பு உண்டாயிற்று.

தக்கயாகப் பரணி உரையின் பிரதி ஒன்றே ஒன்றுதான் இருந்: தது. ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணி இருக்கும். தக்கயாகப் பரணியை ஆராய்ச்சி பன்னிக்கொண்டிருந்தோம். உரையாசிரியர் பெயர் இன்னதென்று தெரியவில்லை. அவர் வடமொழி, தென் மொழி ஆகிய இரண்டிலும் நல்ல புலமை உடையவராக இருக்க வேண்டுமென்பது அவரது உரையில்ை நன்கு தெரிந்துகொள்ள முடிந்தது. தக்கயாகப் பரணிக்கு வேறு சுவடி எதுவும் கிடைக்க வில்லையே என்ற வருத்தம் ஆசிரியப்பெருமானுக்கு இருந்தது. அன்று இரவு ஏதோ ஒரு சுவடியை நான் எடுக்கும்போது அதன் அடியில் தக்கயாகப் பரணியின் மூலம் ஒன்று இருந்தது. ஏதோ புதையல் கிடைத்த மாதிரி ஆசிரியப்பெருமானுக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. அதற்குப் பிறகு நெடுநேரம் வரைக்கும் அந்தச் சுவடியை அவர் ஆராய்ந்து அதிலுள்ளவற்றையெல்லாம் குறித்துக் கொள்ளச் சொன்னர்.