பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

131



உய்யானம் எனும் பெயர் பூண்ட, பூதக்காவல் பெற்ற பூஞ்சோலையும், சடாயு எனும் பறவை அரசன் பிறந்த சம்பாதியின் நினைவாகவும்; காவிரியாறு தோன்றத் துணைபுரிந்த கவேரன் எனும் முனிவன் நினைவாகவும் வளர்த்த சம்பாதிவனம், கவேரவனம் என்ற பூஞ்சோலை களும், புகார் நகருக்கு பெருமையளித்திருந்தன.23

புகார், பலவகைச் சமய மக்களும் கலந்து வாழ்ந்த ஒரு பேரூர்; இதனால் ஆங்கு பல்வேறு சமயச் சார்பான கோயில்கள் சிறப்புற அமைந்திருந்தன: சிவன், திருமால், முருகன், பலராமன், இந்திரன், அவனுக்குரிய வச்சிராயுதம், வெள்ளை யானை அவன் நாட்டுக் கற்பகத் தரு, ஞாயிறு, திங்கள். ஐயன், அருகன் ஆகிய அனைவருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தார் கோயில்கட்டி விழாச் செய்தனர்.24

சக்கரவாளக்கோட்டம் என்ற சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்புெறும், புகார் நகரத்துப் புறங்காடு, பழக்க வழக்கங்களால் வேறுபட்ட பல இனத்து மக்களுக்கும் ஏற்றவாறு அமைந்திருந்தது. அப்புறங்காடு, அந்நகர் வாழ் மக்களின் நாகரீக வளர்ச்சிக்கேற்பு வாய்ப்பும் வனப்பும் பொருந்தியிருந்தது.25

மழை வளம் குறையாப் பெரிய மலையில் தோன்றி, வெள்ளம் பெருக்கெடுத்தோடப் பாய்ந்து வரும் பெரிய பெரிய ஆறுகள்போல், உலக மக்களெல்லாம், ஒருங்கே விரைந்து நுழையவல்ல உயர்வும் அகலமும் உடைய, புகார் நகரத்துப் புறவாயில்கள். அவற்றுள், காவிரியாற்றுக்குக் கொண்டு விடும் மேற்றிசை வாயிலுக்குப் போகும் வழியின் இரு மருங்கும், நிழல் தரு மரங்களை வரிசையாக வளர்த்திருந்தனர்.26