பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

என் தமிழ்ப்பணி



4. “பொதுவறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்,
முடிந்த கேள்வி முழுதுணர்ந்தோரே”

-சிலம்பு : 1:16-19

“உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர்மலிந்த பயங்கெழு மாநகர்,
முழுங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது”

-சிலம்பு : 2 : 1-4

5. “வெளில் இளக்கும் களிறுபோலத்
தீம்புகார்த் திரை முன்துறைத்
தூங்கு நாவாய் துவன்றிருக்கை
மிசைக்கூம்பின் அசைக்கொடி”

-பட்டினப்பாலை:172–175

6. வேயாமாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காலதர் மாளிகை இடங்களும்”

-சிலம்பு 5:7-8

“நல் இறைவன் பொருள் காக்கும்
தொல் இசைத் தொழில் மாக்கள்...
வைகல்தொறும் ஆசைவு இன்றி
உல்குசெய...........
நீரினின்று நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர் பரப்பவும்
அளந் தறியாப் பல பண்டம்
வரம் பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங் காப்பின்