பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

45

5. ஒய்; கொண்டு சென்று விற்கும்; உமணர் உப்பு
வணிகர்;

6. ஒழுகை: வரிசையாகக் செல்லும்; நோன்பகடு:
கரிய எருதுகள்;

7. அயிர்; நுண்மணல்;

8. வாங்கி; இழுத்து;

9. வறுங்கலம்; பிச்சை எடுக்கும் கலம்; மல்க நிறைய;
வீசி: வழங்கி;

10. பாடு; பங்கு; கொள்ளை சாற்றி: விலைகூறிவிற்று;

11. கோடு; கரை;

12. துங்கும்: உறங்கும்;

13. மண்ணா முத்தம்; முத்துக்கள் போலும் அரும்புகள்;

14. வண்ணம்: நிறம்: எவனோ: எந்நிலையில் உளது.

உள்ளுறை : கடலில் வாழும் மீனை நுளையர் அதனின்றும் வெளிப்படுத்தி, உயிர்போக்கி, கண்டவர்க்கெல்லாம் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, பின்பு உயிர்க் கொன புரிந்துவிட்டோமே என்னும் இரக்கம் இன்றி மணல் மேட்டில் உறங்கினாற்போல், பெருங்குலத்தில் பிறந்த இவளை நீ நும் வசமாக நீக்கி வருந்தி, வேறுபாடுகண்டு எல்லோரும் இவளைச் சூழ்ந்து கொள்ளுமாறு அலராக்கிப் பின்பு அத்தகைய நினைவேதும் இன்றி உன் ஊரில் உறங்கு கின்றாய் எனக்கூறியதாக உள்ளுறை கொள்க.