பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

135


தமிழ் அக்காதெமி-
வள்ளலார் கோட்டம்
ஒரு குறிப்புணர்த்தல்


1997 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதவாக்கில் கலைஞர் அவர்களை சந்தித்தேன்.

கலைஞரும் வழக்கத்தை விட தெம்பாகவே இருந்தார். முன்னதாக கலைஞர் வீட்டில் இருந்த அமைச்சர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கலைஞருக்கும் எனக்கும் உள்ள நெருக்கம் புரிந்து விட்டது. நானும் அந்நியத் தன்மை போய் சொந்த இடத்திற்கு போவது போலவே போனேன்.

கலைஞரை மாடியில் சந்தித்து பல்வேறு அரசியல் சமூக நிகழ்வுகள் குறித்து பேசிக் கொண்டு இருந்தோம். பின்னர் கலைஞரிடம் நான்கு குறிப்புகளை சுருக்கமான அறிமுகத்தோடு கொடுத்தேன். மின்னச்சில் எடுக்கப்பட்ட குறிப்புகள். பொதுவாக வேறு ஒருவராக இருந்தால் சொல்லுங்க அப்புறமா படிக்கிறேன்’ என்பார். ஆனால், கலைஞரோ நான்கு குறிப்புகளையும் பொறுமையாகப் படித்தார்.

முதலாவது குறிப்பில் நாட்டில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்கள், மக்களுக்கு சரியாகப் போய்ச் சேரவில்லை என்ற எனது நேரிடையான அனுபவம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியிருந்தேன். ஒரு கிராமத்தில் உதவிக்குத் தகுதி உள்ள ஊனமுற்றவரோ, விதவைப் பெண்ணோ, ஓய்வுதியம் பெற வேண்டிய மூத்தோரோ தமிழக அரசின் உதவி இல்லாமல் விடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக தற்காலிகப் பதவி நீக்கம் செய்து விட்டு இந்த ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். மலை, மகமதுவிடம் போகாது, மகமதுதான், மலையிடம் போகவேண்டும் என்ற பழமொழியை மனதில் வைத்து இப்போதைய முறையான,