பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

45



கன்னியாகுமரி மாவட்டத்தில் நமது முப்பாட்டிகள் இடுப்புக்கு மேலே எந்த துணியையும் போடக்கூடாது என்று இருந்த இந்து மத அட்டூழியமோ, பஞ்சமருக்கு இடமில்லை என்று அந்தக் கால பேருந்துகளில் வெளிப்படையாக எழுதி வைக்கப்பட்டதோ, குற்றால அருவியில் குளிக்கக் கூட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமை கிடையாது என்ற தகவலோ எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்த தகவல்களை தாங்கிய நூல்களை நான் படித்ததில்லை. இவை கிடைத்திருந்தால் படுகளத்தில் ஒப்பாரி தேவையில்லை என்று கருதி நான் ஒரு வலுவான திராவிட இயக்கவாதியாக மாறியிருப்பேன். இந்த தகவலின்மையே இந்த இயக்கத்தை நான் எதிரியாக பாவிக்கும் மனப்போக்கை என்னுள் ஏற்படுத்தி விட்டது.

இந்த இயக்கத்தின் வடிவமாக அண்ணா எனக்கு தோன்றவில்லை. காரணம் அவர் தமிழ், சிந்தனையாளர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தாண்டி பாமர மக்களுக்கு போகவில்லை. ஆனால் கலஞைரின் தமிழோ பாமர மக்களை கவர்ந்தது. அவர்கள் மத்தியில் அண்ணாவை விட கலைஞரே வலுவாக நின்றார். மாணவர்கள் அண்ணாவை மதித்தார்கள். வியந்தார்கள். ஆனால் கலைஞரை தங்களில் ஒருவர் என்பது போல் நேசித்தார்கள். இதனால் கலைஞர் மீது எனக்கு கண்மூடித்தனமான கோபம் ஏற்பட்டது. போதாக்குறைக்கு, எம்.ஜி.ஆருக்கு ஏற்றம் கொடுக்க வேண்டும் என்பதற்காக நடிகர் சிவாஜி கணேசனை, திமுக தொண்டர்கள் குறிப்பாக மாணவர்கள், தொந்தி கணேசன் என்றும், திருப்பதி கணேசன் என்றும், கஞ்சன் என்றும் திட்டித் தீர்த்து அவரது அற்புதமான நடிப்பை மூடி மறைத்தது எனக்கு இந்த இயக்கத்தின் மீதே ஒரு வெறுப்பை ஏற்படுத்தி விட்டது.

இளம் வயதில் ஒன்று பதிந்து விட்டால், அப்படி பதிந்தது பதிந்தது தான் என்பது என் வரைக்கும் உண்மையாயிற்று. திராவிட இயக்கத்துடன் மானசீகமாக இணைவதற்கு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பட்டன. ஆனாலும், பசுமரத்தாணி என்பார்களே அப்படி திராவிட எதிர்ப்பு என்னுள்ளே பதிந்துவிட்டதால் எனக்கு ஏற்பட்ட சிறுமைகள் கூட பெரிதாக தெரியவில்லை.

எடுத்துக் காட்டாக, ஒரு தடவை பாரதி விழாவில் நடந்த பேச்சுப் போட்டியில் எந்த சூது வாதும் இல்லாமல் பாரதி