பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு } { },

யில்லை, ஆனால் எனக்கு எதிலேயுமே பிடிப்பு இல்லை, என் கோளாறே அதுதான். இதைவிட அது, அதைவிட எது என்று ருசி பார்த்துப் பார்த்தே, கிளைக்குக் கிளை தாவியே, எனக்கு எதிலுமே ஆழமான பற்று இல்லாமல் போய் விட்டது. பற்றற்றானின் தனிமை பயங்கரம், பாஸ்கர்.

என் பெற்றோர்கள், எனக்குச் சின்ன வயதிலேயே, மோட்டார் விபத்தில் இருவருமே மாண்டபின் , nursery, nursing home, hostel, hotel srgörg, su oTrégi, 35 gar வங்கியின் trusteeship இல் விட்டுப்போயிருந்த என் சொத்து எக்கச்சக்கமாக வளர்ந்து, எனக்கு வயது வந்ததும் என் னிடம் ஒப்படைக்கப்பட்டதும், அதன்மேல் முதல் வெறி தணிந்த பின், அப்புறம் என்ன? extreme boredom தான். மாறுதலுக்கு, மாற்று ஏதோ ஒண்னு எனும் desperation, depression 5 rair. Grabrše discipline stao urga, grga šGg தெரிகிறதே!

காலேஜிலிருந்தே என்னை அறியாமலே எனக்கு இந்தப் பார்வை தான் என்று எனக்கு இப்போ தெரிகிறது, அப்பவே உனக்கு நான் அப்பப்போ புத்தகம், நோட்புக், special fees என்று திருப்பித் தரமுடியாத கடன்களாக உதவி செய்த போதிலும் எனக்கு உள்ளுர Amusementதான். உன் நிலைமை, பாஸ்கர், பாவம், அப்போதி விருந்தே, ஏன், எப்பவுமே சரியாக இருந்ததில்லை அல்லவா? என் பேப்பர் களை நீ தயார் செய்தாய், என் home work ஐ நீ செய்தாய். நீ எனக்கு ஒரு Sydney Carton ஆக இருந்தாய், பேரம் நல்ல பேரம்தான், இல்லையா? -

ஆனால் பாஸ்கர், திவாகர் ஒன்றும் dull boy அல்ல. அதற்கென்ன, உன்மாதிரி தங்கப் பதக்கம் வாங்கமுடியாது என்னால், என்னிடம் முயற்சி என்கிற பெயரில் உடலுக்கும் மனதுக்கும் வரவழைத்துக்கொள்ள உற்சாகம் மட்டும் இருந்தால், உன் தயவே எனக்கு வேண்டாம். ஆனால் அவ்.