பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காயிதக் கப்பல் g 7

தித்திப்பு நொறுக்குத் தீனிக்காரராமே! அதனால் மதுர் எப்பவும் ஸ்டாக்கில் மிட்டாய் வைத்திருந்ததாகவே வரலாறு சொல்கிறது.

இவர்கள் பேருக்கோ, சொற்களுக்கோ, செயல் களுக்கோ காப்பிரைட் இல்லை. இவர்கள் உலகத்தின், சொத்து, இவர்களைப் பற்றித் தைரியமாகப் பேசுகிறோம். வேறு பெயர்களும் எனக்குத் தெரியும். இப்போது சன்யாசி கள், தனியாகவோ, சேர்ந்தோ ஸ்தாபனமாக விளங்கு கிறார்கள். இலை, சருகு, கிழங்கு, காற்றைப் புசித்த ரிஷிகள் புராணங்களோடு சரியா? -

மேலே ஆகாசம், கீழே பூமி-இவன்தானே சன்யாசி? சரி இன்று திடுக்கென, இப்படிக் கிளம்பிவிட்டேனே. இதனு டைய மன அடிவாரம் என்ன? தோ பார், உன்னைப் பற்றி எல்லாமே உன்னால் தெரிந்துகொள்ள முடியும் என்று எண்ணாதே! எல்லாம் பையப் பைய. இதுவே ஒரு சூத்திரம். இதன் சரடு ஜன்மா. ஜன்மாவாக ஜன்மாவுக்குமப்பால் நீளம் கொண்டது. முடிவேயற்ற நீளம்,

இதைப் பேசுவது இப்போது என்னுள் யார்?

இது சைத்தான் அல்ல.

வீட்டில் தேடுவார்கள். கொஞ்சநாழி கவலைப்படு வார்கள். உனக்கு அதிர்ஷ்டமிருந்தால், ஓரிரு கண்ணிரும் சிந்தலாம். அவ்வளவுதான். உனக்காக யாரும் ஒருவேளை காபியைத் தவறப் போவதில்லை. அடுப்பில் பூனைக்குட்டி விளையாடப் போவதில்லை. அரைத்து வைத்திருக்கும் தோசை மாவை வார்க்காமல் விடப்போவதில்லை, நீயே சொல், புளித்துப் போகாதா? பலூனை ஊசியால் குத்தி, ாைற்போல், என் மானம் எனக்கே குலைகிறது. Track மாறு. gearஐ மாற்று சீட்டைக் குலுக்கு மறுபடியும் வெட்டு.

மனமெனும் சீட்டு.