பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரணி X 董ア

போய்விட்டான், கவலைகளை மீண்டும் கொடுத்து விட்டு.

இன்னிக்கு ஒளியும் ஒலியில் மண்ணா?' என்று அவள் புலம்ப ஆரம்பிக்கையிலேயே விளக்குகள் ஏற்றிக்கொண்டன. வெளிச்சம் வெள்ளமாய்ப் புரண்டது. அதுவே ஆசி,

ஹாய்!” குதித்துக்கொண்டு குந்தளை உள்ளே ஓடி னாள் தலையில் அடித்துக்கொண்டார் மாட்டுப்பெண் வர வயசாச்சு.

அடுத்தாற்போலேயே கேட் க்றீச்" பார்த்து வா!' என்று சொல்லக் கூட நேரம் தரவில்லை. இரண்டு கை களிலும் இரண்டு டைகளைத் துரக்கிக்கொண்டு, குடும்பத்தின் கோவர்த்தனதாரி விர் ரென்று நடந்து உள்ளே வந்து விட்டாள்.

வேடிக்கை பாத்திண்டிருக்கேளே, ஒரு பையை வந்து வாங்கிண்டால் என்ன? கை, விட்டுப்போறது. இப்படி உழைச்சாகணும்னு என் தலையெழுத்தா?’’

ஆனால் பையைக் கொடுக்கமாட்டாள். கொடுத்து விட்டால், தியாகி ஆவது எப்படி? அது நாக்கு அல்ல. கொடுக்கு:

பின்னாலேயே கேட் தடதடா.

அதுதான் நந்துவின் பிரவேசம் சைக்கிளோடு. வாங்கி இரண்டு வருஷங்களாகவில்லை. பேரீச்சம் பழக்காரனுக்குப் போடுகிறமாதிரி, எட்டு ஊருக்குக் கேட்கறமாதிரி கலகலத் துப்போயாச்சு.

என்னடா, அதுக்குள்ளே வந்துட்டே?”

இன்னிக்கு ப்ராக்டிகல்" இல்லை; வாத் தியாருக்கு ஒளியும் ஒலியும் பார்க்கணுமாம்.'

என்ன மாமா, ஒரே கலாட்டா, உங்கள் வீட்டில்?’’

பி.-2