பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் 2岛荔

- தேவி, என்னை-எங்களை மன்னிச்சுடு’

வலப்!” கூம்பலில் உறைந்துபோன அவர் கைகளைப் பிரித்துவிட்டாள். அவளுடைய உடலின் உற்ற கறுப்பில் உள்ளங்கைகள் செந்தாமரை. வெள்ளை விழியோரங்களில் செந்நரம்புக் கொடி, உதடுகள் வெற்றிலைச் சிவப்பு. புருவ நடுவில் குங்குமம் நெற்றியில் சூர்யோதயம்.

அப்பா, நான் பிறந்த வீட்டுக்கு வர ஆசைப்படறேன். என்ன முழிக்கறேள்? நான் உங்கள் வீட்டில் வந்து இருக்கப் போறேன். ஒருநாள்தான்’-சுட்டுவிரலைக் காட்டினாள்.

வாயடைத்துப் போனார். உள்ளே சந்தோஷம், பயம் இரண்டும் சேர்ந்த குழப்பம்.

அப்பா, பொண்ணாப் பிறந்தால் பிறந்தாத்து ஆசை துப்புற விட்டுடாது."

• பாண்டிய ராஜகுமாரி, நீ என்னை கேவி செய்கிறாய்.”

கமலாம்பிகே, குழந்தேன்னு மூச்சுக்கு மூச்சு கூப்பிட்டது யார்?’’

அம்மா, என்னைக் கேட்கணுமா, என்னைக் கேட் காமலே என் வீட்டுக்கு நீ வந்து உட்கார முடியாதா?’’

வாய்ச்சொல் கெளரவம்னு ஒண்னு இருக்கேப்பா! தவிர, நான் வெகுளி என் கணவரின் எல்லையற்ற பொறு மையும் உங்களைப் போலோரின் எல்லையற்ற அன்பும்தான் நான் இந்த அளவுக்கு என் இஷ்டத்துக்கு வளரக் காரணம். பொறுமைக் கடல்னா அவர்தான். எனக்கு அது முற்றிலும் பொருந்தாது. நான் வெகுளி, இப்பவும் அவரைக் கேளாமல் தான் வந்திருக்கேன். அவர் தடுக்கவில்லை. உங்கள் விஷயத் தில் தடுக்கமாட்டார். என் குழந்தைகளிடம் எப்போது தான், எப்படித்தான் நான் இருக்கிறது அப்பா?”