பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவதையின் கனவன் 3 ፪

நீண்டு, நுனியில், சுருண்டிருக்கும். அந்தக் கருவிழிகளில் கனத்துக்கு ஒரு புது ஒளி, புது அழகு தோன்றி, என்னை ஒரே மயக்காய் மயக்கி, தன் மந்திரத்தில் கட்டிவிட்டது.

என் திகைப்பைக் கண்டு, புன்னகை புரிந்துகொண்டே, என் கையைப் பிடித்து இழுத்து, அங்கே கிடந்த ஒரு கல்லில் உட்காரவைத்து, தானும் என்னருகில் உட்கார்ந்து, என் கழுத்தை ஒரு கையால் கட்டிக்கொண்டு. அவள் என் முகத் தைப் பார்த்துச் சிரித்தாள். அவள்மேல் கமழ்ந்த நறுமணம் என்னைக் குடிமயக்கத்தில் அழுத்தியது.

"இந் நள்ளிரவில்-நீ யார்? என்றேன்.

தெரியாதா-நான்தான் கண்ணம்மா-உன் ஸ்திரீநீ என் கணவன்-இதோ பார்."

‘'சிரித்துக்கொண்டே, என்மேல் குனிந்து, தன் கழுத்தி லிருந்த ஒரு நூலை, என் கண்களில் ஒற்றினாள். மஞ்சள் மசேல் என்றிருந்த அது சந்தனமணம் கமழ்ந்தது. எனக்கு ஞாபகம் வந்தது,

ஒ , உனக்காக நான் எத்தனை நாள் காத்துக்கொண் டிருந்தேன் தெரியுமா:- நீயும் நன்றாய்த்தான் இ கிறாய்!” என்று சொல்லி, என் கன்னத்தில் ஒரு திட்டுத் தட்டிச் சிரித்தாள், குடத்தில் தண்ணீர் தளும்புவதுபோல் இருந்தது, அந்தச் சத்தத்தின் இனிமை,

கண்ணம்மா இம்மாதிரியே, ஒவ்வொரு இரவும், என்னை அழைப்பாள். அவளுடைய அற்புதமான மயக்கை என்னால் உதற முடியவில்லை. என் மனம் இரண்டாய்ப் பிளந்து, ஒன்றுடன் ஒன்று போராட ஆரம்பித்துவிட்டது. கண்ணம்மாளின் சகவாசம் பொல்லாது" என்று ஒரு குரல் அலறியது. ஆனால், நான் அவளது ஆசை வலையில் சிக்கியதால் நேர்த்த மதோன்மத் தம், அதை அமுக்கிக்