பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ் குண்டில் சில பிம்பங்கள் 望置

இவன் என் குட்டுக்களை என்ன கண்டுவிட்டான்?

என்ன உடைக்கப் போகிறான்? என்கிற...

அழ்-ழுக்-க்கு வெள்ளைப் புடைவை:

சலவை காணாமலே, தோய்த்துத் தோய்த்து செங்காவி ஏறிப்போய், அழியாத சமையல் கறைகள் படிந்துபோன புடைவை .

பாட்டி!'

நான் உன் பாட்டியில்லை!’

"சரி, இந்த மறுப்பை கேட்டுக் கேட்டு எனக்கு அலுத்துப் போச்சு உன் விஷயத்தில் உன் வீட்டார், இவ்வளவு கொடுமையாக இருந்திருக்க வேண்டாம் உன் புருஷன் செத்தான். செத்தவன் தலைவிதி. செத்தவனுக்குப் போட்ட முழுக்கோடு அவனை மறந்துவிட்டு, உன்னை இன் னொரு இடத்தில் கட்டிக்கொடுத்து, நீ நிறைவு கண்டுநீயும் நிறைஞ்சு, உன் குழந்தைகளை நீ பெற்றெடுத்துக் கொண்டு-அந்த நிலையில் திக்கற்ற என்னை நீ துரக்கிண்டு வந்திருந்தாலும், நீயும் இப்படி இருந்திருப்பாயா? நானும் இப்படியிருப்பேனா?"

என் கழிவிரக்கத்தில் எனக்கே அழுகை வந்துவிட்டது.

"என்னடா, நூத்துக்கிழவா! என்ன பிரசங்கம் பண்ண வந்துட்டே?”

எல்லாம் உனக்கு ஏற்கெனவே தெரிஞ்சதுதான்... பாட்டி, உன்னுடைய ஆதங்கங்களுக்கு என்னைப் பயன் படுத்திக் கொள்ளத் தானே என்னைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தே?’’

எச்சக்கலை, என்ன்டா சொல்றே?’’