பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு முத்தம் 荔等

அப்பாவும் தடுக்கவில்லை.

இப்போதெல்லாம் அப்பா எதற்குமே ஆக்ஷேபம் தெரி விப்பதில்லை. இல்லை, தன் அபிப்பிராயமே தெரிவிப்பு

எனக்குத் தோன்றுகிறது. நாளடைவில் அவர், அவரிடம் எங்களுக்கிருந்த அத்து மட்டும் இருத்திக் கொண்டு மற்றபடி எங்கள் இடத்துக்கே விட்டுவிட்டார். அதனாலேயே எங்களுக்கு அவரிடம் அச்சம் அதிகரித்தது.

அண்ணாவுக்குக் கலியாணமான சில நாட்களுக்கெல் லாம் அப்பா எங்களைத் தன் அறைக்குக் கூப்பிட்டார்.

மன்னியையும் சேர்த்துத்தான்.

'Look here, Boys, உங்கள் தாயார் போன பின்னர் உங்களுக்கு மாற்றாந்தாய்க் கொடுமை நேர்ந்ததென்று உங்கள் வாயிலும், பிறர் வாயிலும் பட வேண்டாம் என்றே நான் மறுமணம் செய்துகொள்ளவில்லை. நானே சமைத்துப் போட்டு, நானே உங்களை வளர்த்தேன். நான் செய்தது சரியா அல்லது சரியாக உங்களை வளர்த்தேனா என்று இப்போது ஆராய்வதில் அர்த்தமில்லை. நீங்கள் இரு வருமே ஊன்றிக் கொண்டாகிவிட்டது. உங்கள் பொறுப்பு கள் உங்களுடையது. என்னைக் கேட்காத ஆலோசனை களை, புத்திமதிகளை நான் வழங்கமாட்டேன். இதைச் சொல்லவே அழைத்தேன். நீங்கள் போகலாம்.”

நெடுநாளைக்குப் பிறகு நான் அப்பாவிடம் கேட்டது நீண்ட பேச்சுதான். சினிமா டயலாக்' என்று கிசுகிசுத்து அண்ணா தோளையிடித்தான். ஆனால், எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏதோ துக்கமாயிருந்தது.

இதற்கு இரண்டு வாரங்களுக்குப் பின் அப்பாவைக் காணவில்லை, மிரண்டு போனோம், தானே பறக்கத் துக்கியெறிந்த பரிகளைப் போல.