பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு முத்தம் 57

உள்ளூரச் சிரிப்பு வந்தது. இதோ அண்ணா றாபனா” பண்ணுகிறான்.

  • நீ மனப்பால் குடிச்சுண்டேயிரு. அவனுக்குப் பெரி யோர்களால் நிச்சயிக்கப்பட்ட வரன் தேவைப்படவில்லை. காதல் பண்ணி முடிந்தால் பரிகைrயும் வைத்துத் தேர்ந் தெடுக்கப் போறான். மேனாட்டில் கலியாணத்துக்கு முன் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்காகச் சேர்ந்துகூடக் கொஞ்சகாலம் வாழ்கிறார்களாம். என்ன அம்பி, அப்படித் தானே?”

எரிச்சலாய் வருகிறது. என்ன பண்ண முடிகிறது?

ஆமாம். உன்னைப் போல் அதிர்ஷ்டம் எல்லாருக்கும் வாய்க்குமா’’ என்றேன்.

மன்னி குறுக்கிட்டு, அம்பி, அப்படியெல்லாம் சொல்லா தேங்கோ நான் சொல்றேன். உங்களுக்கு அதிர்ஷ்டம் காத் திண்டிருக்கு. ஊரில் எங்கள் வீட்டுக்கெதிரேயே ஒரு பெண் உங்களுக்காகவே வளர்றா. படிப்பு சுமார்தான். ஆஹா, ஒஹோன்னு செய்யமுடியாது. பெண்ணுக்கு அப்பா, அம்மா இல்லை. அண்ணன் தான் செய்யனும். அவன் உத்யோகம் சுமார்தான். வீட்டுக்காரியம் மாங்குமாங்குனு செய்வாள் என் சமையலை நீங்கள் மெச்சிக்கறேள். அவள் கைப் பக்குவத்துக்கு என்ன சொல்லப்போறேளோ? மருந்து வேச்சமாதிரி பின்னாலேயே கத்துவேள். பார்க்கவும் லக்ஷணம். வெள்ளிக்கிழமை எண்ணெய் தேச்சுண்டால் ஒரு பாடு, கூந்தலைக் கட்டையால் அடிச்சுத்தான் கசக்கணும். அத்தனை அடர்த்தி, அத்தனை நீளம். அவளைப் பண் ணிைண்டேள், ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுத்த புண் னியமும் கட்டிப்பேள்."

இல்லவேளை...வண்டி நகர ஆரம்பித்துவிட்டது. நான் வண்டியோடு கூடவே கொஞ்சதூரம் ஒடவில்லை. பின்தங்கி விட்டேன்.