ஒரு முத்தம் 81
என்னைத் தனியென்று எந்த நியாயத்தில் சொல்லிக் கொள்ள முடியும், சமுதாயத்தின் நடுவிலேயே இருந்து கொண்டு? என் இஷ்டப்படி இருக்கத்தானே ஹாஸ்டலுக்கும் வந்தேன்?
ஆனால் அண்ணா, மன்னி, குழந்தைகளைப் பார்க்கும் போது குடும்பத்தின் அடைக்கலத்துக்குத் திரும்பிவிடலாமா என்று மனம் அடித்துக்கொள்கிறது. எட்டு வருடங்களாகத் தனி அறை, ஒட்டல் சாப்பாடு, வயிற்றுப் புண்ணுக்கு மாத்திரை...
மன்னி, தனிக்குடித்தனம் அலுத்துவிட்டதென்கிறாள். குடும்பம் பெருகிய பின்னும்...
தனிமை-அப்பா, உங்களுக்கு அலுக்கவில்லையா? அலுத்திருந்தால் திரும்பி வந்திருப்பீர்களே!
வெளியூரிலிருந்து வந்தவர்கள் பார்த்தமாதிரி இன்னும் பேசுகிறார்கள்.
உன் தகப்பனார் ரிஷிகேசில் இருக்கிறார். முக்கியமாக உன்னை ரொம்ப விசாரிச்சார், ’’
- அம்பி, என்னன்னு சொல்வேன், மதுரை கோவில் வாசலில் பரதேசிக் கோலத்தில் பிச்சையெடுத்துண்டிருக் கார். என்னைப் பார்த்துத் தலையைத் திருப்பிக்கொண் டார். எனக்கும் அப்படித்தானிருந்தது, இப்படியிருக்க அவருக்கென்ன தலையெழுத்தா? ஏன் அப்படியிருக்கார்?’’
சொல்பவர்க்கென்ன?
இமயமலைச்சாரலில் ஒரு பனிக் குகையில், அவதுரத ராகப் பார்த்தேன்."
முன்னால் இந்த ஆசாமி, இமயமலைச் சாரலில் பனிக் குகைக்குப் போக என்ன நிமித்தம்?
யார் கேட்பது?