பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德盛 லா, ச, ராமாமிருதம்

இவர் வரல்லே. கடிதாக கூடக் கிடையாது.” நான் இப்படிக் கேக்கறேன்னு நினைக்காதீங்க மிஸஸ். மார்வா... ஆள் உயிரோடு இருக்காரா இல்லையா?"

எல்லாம் கல்லுகுண்டாட்டம் இருக்கான்.” வார்த்தை களைத் துப்பினாள்.

நான் மேலே கேட்க விரும்பவில்லை. மேலே கேட்கத் தேவைவில்லை.

அம்பி, விட்டுக்கு வாங்களேன். காபி சாப்பிட்டுப் போலாம். நான் காபி நல்லா செய்வேன், பிராமின்ஸ். மாதிரியே."

சாம்பார் சேஞ்ச மாதிரியா? sorry, என் பஸ் வத்துட்து வரேன்.'

எனக்கு பஸ் இல்லை. நான் நடைதான். ஆனால், ஏறி விட்டேன். எனக்குப் பயமாயிருந்தது. இவள் என்னைச் சாப்பிடுவதாகத் தீர்மானித்துவிட்டாள்.

அடுத்த நிறுத்தத்தில் இறங்கி நடந்தேன். கால் போன வழி, இந்தப்பக்கம் வந்ததாக ஞாபகம் இல்லை. இடம் புதிதாக இருந்தது. ஒரு சந்தில் திரும்பியதும், இடமே வெடுக்கெனத் தனியாகத் துண்டிக்கப்பட்டாற்போல் சந்தடி யும் இரைச்சலும் சட்டென அடங்கி, ஏன் நிசப்தமே குடி கொண்ட ஒரு குறுஞ்சாலை பிறந்து வளர்ந்தது. மந்திரக் கோல் மஹிமை போலும் புயல் நடுவே அமைதி. சாலை நடுவே ஒழுங்கான இடைவெளிகளில் மரங்கள். இரு பக்கங் களிலும் மதில்களின் பின்னால் தோட்டங்கள் தோப்புக்கள் நடுவே தெரிந்தும் தெரியாததுமாய்ச் சின்னதும் பெரிது மாய்ப் பங்களாக்கள், காட்டேஜ்கள் பதுங்கின. போஷ்' ஏரியா பேசலும், இல்லை, பூராவே தனியார் சொத்தோ? வரலாமோ கூடாதோ? ஏதோ சைகையால்தான் இங்கு இழுக்கப்பட்டிருக்கிறேன். காலைக் கனவு தொடர்கிந்தர். தப்பரிசை -