பக்கம்:எப்படி உருப்படும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

23 கரமான பிஸினஸாக முடியாது. தமிழ் நாட்டிலே என்று பணமூட்டைகளுக்கு நாட்டுமக்கள் புரியும் பாஷையில் நிகழ்த்திக் காட்டுகிறார்களோ, அன்றுதான் படமுதலாளி கள் தே ய் ந் து போன பழஞ்சுவட்டை விட்டு வேத பாதைக்குத் திரும்ப எண்ணுவார்கள். இல்லையெனில், மீண்டும் மீண்டும் கிருஷ்ணலீலைகளும், நாரதவேலைகளும், பவளக்கொடிகளும், பாமா விஜய ங் களும்தான் வரும். இன்னும் சில வருஷங்களுக்குப் பிறகு இந்தக் குப்பைக் கதைகள் வர்ண ஜாலங்களுடன் வெள்ளித் திரையிலே துள்ளவரும். இந்த இழிநிலை சப்பாத்திப் புதர்போல் வளராது தடுக்க நாட்டு மக்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். மக்களை சிந்திக்கும்படி தூண்டி, சிந்தித்து உண்மையை உணர்ந்து எதிர்ப்பு உணர்ச்சியை செயலில் காட்டும்படி செய்ய, தனி இயக்கமே தேவை.

இந்த இயக்கம் திட்டங்கள் வகுத்து, ஒழுங்கான முறையில் பிரசாரம் செய்து, கலை உணர்வை பரப்ப.

வேண்டும். ரசனையை வளர்க்க வேண்டும். போலித்தன்மை யையும், காளான் குணத்தையும், புல்லுருவிப் பண்பையும், இழிதகைமைகளையும் ஒழிக்க வேண்டும். இந்தவிதமான எதிர்ப்பு முன்னணி ஏற்பட்டால்தான் எதிர்ப்பு இயக்க பூர்வமாக வளர்ந்தால்தான், பட முதலாளிகளும் கலை நிபுணர்களும் மனம்மாறி நல்லது செய்ய முற்படுவார்கள். இவ்வளவு தீவிர சக்தியாக எதிர்ப்பு வளராத வரை, பட முதலாளிகள் திருந்தப்போவதில்லை. தமிழ் சினிமாக்கலையும் உருப்படப் போவதில்லை !