பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு | } நாட்டின் பணப்பெருக்கச் சாதனங்கள் எல்லாவ்ற்றை, யும் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ளும் ஈனப்பிறவி எடுத்ததாயாயிற்றே அந்த யூத இனம் ! தனக்கென்று ஒரு நாடும் சொந்தமாயில்லாமல் கண்ட கண்ட இடங் களில் குடியேறி அங்கிருக்கும் வசதியை வாணிபத்தை அதிகாரத்தை அரசியலே மெதுவாகக் கைப்பற்றி மற்ற வரை நாயினுங் கேடாய் நடத்தும் பழக்கம் பெற்ற தாயிற்றே! ஜெர்மன் முழுதும் அவர்களுடைய ஆதிக்கந் தானே. அவ்வளவு சுயநலக் கூட்டத்தில் பிறந்த இவ னிடம் ஒப்படைத்திருக்கலாமா இவ்வளவு பெரிய இரா ணுவத்தை? வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் வெள்ளேயுள்ளம் படைத்த நாடு எவ்வளவு பெரிய ஆப்க் தில் சிக்கிக்கொள்ள இருந்தது. வீர மாதா ஜோன் ஆப் ஆர்க் அளித்த வெகுமதியாயிற்றே இந்த நாடு. வால் டேரும் ரூஸோவும் நடமாடிய தாயகமாயிற்றே இந்த புண்ணிய பூமி. வெஞ்சமரில் அஞ்சாத வீர நெப்போலிய னுடைய பீரங்கிகள் கர்ஜனை புரிந்த இடமாயிற்றே! இந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கச் சதி செய்து விட் டான் சண்டாளன். திறமை மிக்க இராணுவ காரியாலயத் தார் இந்த நயவஞ்சகனுடைய மோசடிகளைக் கண்டு பிடிக்காதிருந்தால் இந்நேரம் காடாயிருக்குமே? இல் &லயானல் பலம் பொருந்திய பாரீஸ் கோட்டையில் ஜெர் மன் கொடி பறந்திருக்குமே, வீரர்கள் நடமாடிய வார் சேல்சில் வடிகட்டிய அயோக்கிய யூதர்கள் ஆரோகணித் திருப்பார்களே ' எவ்வளவு ஆபத்து வரவிருந்தது. இராணுவத்தின் முகத்தில் கரி பூச எண்ணிவிட்டான். ஜெர்மன் முழுதிலுமுள்ள எல்லா வாணிபங்க்ள் யும் அரசாங்கக் காரியாலயங்களையும் யூதர்களைக் கொண்டு நிரப்பியதைப்போல பிரான்சிலும் நிரப்பிவிடத் திட்டமிட்டு விட்டான். இந்த யூதபூதம் டிரைபஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/11&oldid=759808" இலிருந்து மீள்விக்கப்பட்டது