பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமிலி ஜோலா முதற் பாகம்) கொடும்பாவி என்ன கூட்டம் அங்கே ? வா. வா போய்ப் பார்க்க லாம். எதையோ இழுத்துக்கொண்டு வருகின் ருர்கள். சிறுபிள்ளைகள் விளையாட்டா ? இல்லே, இல்லே பெரிய வர்கள் சாதாரண மனிதர்களா ? அவர்களோடு சில சீமான்களும் வருகின்ருர்கள். குருடா கண் தெரிய வில்லை. 8 மான் க ள் மாத்திரமா வருகின்ருர்கள் ? இராணுவ வீரர்களும் வருகின்ருர்களே. அது-தெரிய வில்லே. ஆம், ஆம் அவர்களுந்தான் வருகிருர்கள். எதாவது புலியை, சிங்கத்தை வேங்கையை வேட் டையாடி, மக்களுக்கு வேடிக்கை கட்டக்கொண்டு வருகின்ருர்களா ? அல்லது ரணகளத்தில் கைது செய்த தளபதியைக் கட்டி இழுத்துக்கொண்டு வருகின்ருர்களா? ஏன் இவ்வளவு அவசரம் ? வா அருகில் போய்ப் பார்ப் ப்ோம்” என்று நாலா பக்கங்களிலிருந்தும் மக்கள் இரள் திரளாக வந்து கூடுகின்றனர். புலியோ சிங்கமோ வேங்கையோ என்று வேகமாக ஒடி வந்தவர்கள் வைக் கோல் உருவங்கள்க் கண்டார்கள். வேதனைப்பட வேண்டியவர்கள் விலா வெடிக்கச் சிரித்தார்கள். யாரு டைய உருவங்கள் இவை, சரியாகத் தெரியவில்லே. வுந்தவர்கள் நின்று வேடிக்கைப் பார்க்கின்ருர்கள். வம்பர்கள் கீழ்வருமாறு பேசுகின்ருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/7&oldid=759871" இலிருந்து மீள்விக்கப்பட்டது