இலக்கிய ஆதாரங்கள்
93
உழுபடையும் பொருபடையும் :
'சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடிப் பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது' என்ற குறிப்புடன் புறநானூற்றில் உள்ள 35-ஆம் பாடலைக் கொண்டு இவ் வரலாறு அமைக்கப் பெற்றது.
- அந்தப் பாடல் வருமாறு :
நளிஇரு முந்நீர் ஏணி யாக
வளியிடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்
அரசெனப் படுவது நினதே பெரும ;
அலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர் பூட்டத்
தோடுகொள் வேலின் தோற்றம் போல
ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடெனப் படுவது நினதே யத்தை ; ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே,
நினவ கூறுவல் ; எனவ கேண்மதி :
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவேண்டு பொழுதிற் பதன் எளி யோர்ஈண்டு
உறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே ;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயில் மறைக் கொண்டன்றோ அன்றே ; வருந்திய
குடிமறைப் பதுவே, கூர்வேல் வளவ,
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்