இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இலக்கிய ஆதாரங்கள்
99
தெள்ளத் தெளிந்தவர் செய்தக்க
தோர் முறை செய்யிலையா
எள்ளத் தனைமலை யத்தனை
யாம் என்பதின்றறிந்தோம்
உள்ளற் கரிய துடையர்டை
கீறிய தொன்றுமொரு
வள்ளல் தகைமையொ டொத்துள
தால்தொண்டை மண்டலமே.
புலவர் செய்த சோதனை :
- இவ் வரலாற்றுக்கு ஆதாரம் கொங்குமண்டல சதகம், 51-ஆம் பாடல்.
திருத்து புகழ்பெறும் ஆணுாரிற்
சர்க்கரை செந்தமிழோன்
விருத்த முடன் அன்னை மேல்ஏறத்
தாய்வெகு ளாமல்எனைப்
பொருத்த முடன் பத்து மாதம்
சுமந்து பொறையுயிர்த்தாய்
வருத்தம் இதில்என்ன என்றான்
அவன்கொங்கு மண்டலமே.
- இதற்கு மேற்கோளாக, இச் சதகத்தின் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ தி. அ. முத்துசாமிக்கோனார்,
அன்னைவெரிந் மேற்கொளச்சேய்
ஆனனத்தை நோக்குதலும்
என்னைஈ ரைந்துதிங்கள்
இன்பமாய்ச் சுமந்தீரே
இவரை ஒருநிமிட
மேசுமப்பீர் என்றுரைத்த