பக்கம்:எழில் உதயம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 எழில் உதயம்

பாடலை முடித்தார். மன்னர் வணங்கி, உங்கள் பெருமையை அறியாமல் இருந்துவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் தரிசனம் பெற்ற காரணத் தால் அபிராமி அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து உங்கள் பெருமையையும் விளக்கியருளினுள்' என்று நிகழ்ந்ததைச் சொன்னர்.

கேட்ட அபிராமிபட்டர் அம்பிகையின் பேரருளே எண்ணி வியந்தார். அவளைத்தான் பாடிக்கொண்டிருக் கிறேன். அவளுடைய காட்சியிலே நான் உண்மையிலே பித்தனகிவிட்டவன்தான்’ என்ருர்.

மன்னர் அந்தப் பாடல்களே முழு நூலுருவத்தில் நூறு பாடலால் நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டினர். தாம் பெற்ற அநுபவத்தையும் மன்னர் பெற்ற அநுபவத் தையும் இணைத்து ஆனந்த அதிசயப் பெருக்கோடு 80-ஆவது பாட்டைப் பாடினர். t

கூட்டிய வாஎன்னைத் தன் அடி யாளில் கொடியவினை ஒட்டிய வா! என்கண் ஓடிய வா தன்னை உள்ளவண்ணம் காட்டிய வா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா! ஆட்டிய வாகடம் ஆடகத் தாமரை ஆரணங்கே! (ஆயிர இதழ் அமைந்த பொற்ருமரையில் எழுந்தருளி யிருக்கும் அரிய அழகியாகிய தேவி, ஒன்றுக்கும் பற்ருத: என்னைத் தன் அடியாருள் ஒருவகைச் சேர்த்தருளியவாறும், அங்ங்ணம் சேர்த்துப் பின் என்பால் உள்ள கொடிய இருவினைகளையும் போக்கியவாறும், என்பால் அருள்புரிய ஒடி வந்தவாறும், தன் திருக்கோலத்தை உள்ளபடியே காட்டியவாறும், அதனைத் தரிசித்து அறிந்த கண்ணும் மனமும் ஆனந்த மேலீட்டால் மகிழ்கின்றவாறும், இவ்வா றெல்லாம் என்னைத் திருவருள் நாடகம் ஆட்டியவாறும் என்ன அதிசயம்!) . . . . . -

மேலே இருபது பாடல்களையும் பயனையும் பாடி அபிராமி அந்தாதியாகிய அந்த நூலை நிறைவேற்றினர் . அபிராமிபட்டர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/14&oldid=546171" இலிருந்து மீள்விக்கப்பட்டது