பக்கம்:எழில் உதயம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 எழில் உதயம்

கிறது. அதை ஒழுங்காகச் செய்தால்தான் பேரும் புகழும் வரும். எம்பெருமாட்டியின் ஆணையின் வழியே அந்தத் தொழிலே இவர் நடத்தி வருகிருர், இவருக்கு மகாமாதாவின் திருவருட்பலம் மிக அவசியமாக வேண்டும். அதனல்தான் வேறு எதையும் எண்ணுமல் சலனமின்றி அவள் திருவடி யையே தியானம் செய்து கொண்டு இங்கே அமர்ந்திருக் கிருர், தனியான இடமாக இருக்கிறதென்று வந்து தியானத்தில் அமர்ந்திருக்க வேண்டும். பின்னலே வந்து பிரமதேவர். அப்பா செய்கிற மாதிரி நாமும் செய்யலாம் என்று அமர்ந்து விட்டார் போலும்! அன்னையின் பெருமை யை என்னவென்று சொல்வது!

சிந்திப்பவர் நற்றிசைமுகர் காரணர்.

இவ்வளவு பெரியவர்கள் தியானிக்கும் பெருமாட்டி அபிராமி. இன்னும் சற்றே உள்ளே போகலாம். இதுதான் எம்பிராட்டியின் அந்தரங்க மண்டபம். இங்கே அவள் தனியே இருந்து இன்புறுவாள். அந்தத் தனிமையிலும் ஒருவர் குறுக்கிடுவார். வேறு யாரும் போக இயலாத இந்த அந்தரங்கச் சூழலிலே புகுபவர் அவர் ஒருவர்தாம். அவர் பரமானந்தமே வடிவமான காமேசுவரர். அவர் இந்த அறையில் வந்து அம்பிகைக்காகக் காத்திருப்பவர். இதோ இவருடைய தேசு பொருந்திய வடிவு தெரிகிறதே! இது என்ன? இவர்கூடக் கண்ணே மூடிக்கொண்டிருக் கிருரே! எல்லாருடைய தியானத்துக்கும் பொருளாக இருக்கும் இவர் எதற்காகக் கண்ணே மூடிக்கொண்டு யோகத்தில் இருக்கிருர்? -

உண்மையில் இவர்தாம் யோகம் செய்து பழகியவர். மற்றவர்களுக்கு அத்தனை பழக்கம் இல்லை. பத்தனய்ப் பாடமாட்டேன் பரமனே பரம யோகி’ என்று தேவாரம் இவரைத்தானே யோகியென்று சொல்கிறது? இவர் யாரைத் தியானிக்கிருர்? - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/144&oldid=546300" இலிருந்து மீள்விக்கப்பட்டது