பக்கம்:எழில் உதயம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று செல்வம் j47

ஒரு கனிமரம் இருக்கிறது. அதில் பல கனிகள் குலுங்குகின்றன. அதில் அடர்ந்த தழையும் மணம் பரவும் மலர்களும் உள்ளன. மரத்தின் பயன் கணிதான். என்ருலும் மரத்தின் நிழலும், மலரின் மணமும் இனிமை யையே தருகின்றன.

சிலர் மரத்தில் உள்ள கனிகளை மட்டும் பெறு கிருர்கள். அது நல்ல பயன்தான். சிலர் நிழலையும் மலர் மணத்தையும் துகர்கிருர்கள். அது பெரும் பயன் ஆகாது; பயனென்றே சொல்வதற்கு இல்லை. ஆனல் தழை, மலர், கனி என்னும் மூன்றிஞலும் உண்டாகும் பயனைப் பெறுகிறவர்கள் சிறந்தவர்கள்,

மரத்தின் நிழலைப் போல இருப்பது இந்த வாழ்வில் உள்ள இன்பம்; மலரின் மணத்தைப் போல இருப்பது சொர்க்க இன்பம்; கனியைப் போல இருப்பது முத்தி இன்பம். இந்த மூன்று வாழ்வையும் இம்மை, மறுமை, முத்தி என்றும் இகம், பரம், மோட்சம் என்றும், சொல்வார்கள்.

அம்பிகையின் தண்ணளிக்காகத் தவம் செய்தவர்கள் இந்த மூன்றையும் சிறப்பாகப் பெறுவார்கள். முதலில் இந்த உலகில் நல்ல வண்ணம் வாழ்வார்கள்; அவர்கள்

வாழ்வு இன்ப வாழ்வாகவே அமையும்.

இந்த உலக வாழ்வில் சிறந்தது அரசபோகம் என்பது பழைய காலத்து எண்ணம்; ராஜபோகம்’ என்று சொல்வார்கள். இம்மை வாழ்வின் இன்பங்கள் எல்லா வற்றையும் நுகர்பவன் அரசன். அரச பதவியைவிட இந்த வாழ்வில் சிறந்தது இல்லை. இது பழங் காலத்தினர் எண்ணம். ஆதலின் இந்த உலகில் முழுமையான இன்ப வாழ்வில் வாழ்வார்கள் என்பதையே, அரசபதவி பெற்று இன்புறுவார்கள் என்று கூறுகிருர் ஆசிரியர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/155&oldid=546311" இலிருந்து மீள்விக்கப்பட்டது