பக்கம்:எழில் உதயம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152. எழில் உதயம்

அவற்றைத் தியானித்துத் தம்மை மறந்து ஈடுபட்டுக் கிடப்பதே ஒரு தவமாகும்.

தண்அளிக் கென்றுமுன் னேபல கோடி

தவங்கள்செய்வார் மண்அளிக் கும்செல்வ மோபெறு வார்?மதி

வானவர்தம் விண்அளிக் கும்செல் வமும் அழி யா முத்தி

விடும்அன்ருே பண்அளிக் கும்சொற் பரிமள யாமளேப்

பைங்கிளியே!

  • பண்களைப் போல இனிமையைத் தரும் திருவாய் மொழியையும் திவ்ய மணத்தையும் கொண்ட சியாமளா தேவியாகிய பச்சைக்கிளி போன்ற தாயே, நின்னுடைய குளிர்ந்த கருணையைப் பெறும்பொருட்டு முன் பிறவிகளில் பல கோடி தவங்களைச் செய்தவர்கள் இந்த உலகத்தைக் கர்த்து ஆளும் செல்வமாகிய அரசுரிமையை மட்டுமா பெறுவார்கள்? அறிவையுடைய தேவர்களுக்குரிய தேவ லோகத்தை ஆளும் செல்வமாகிய இந்திர பதவியையும், பின்பு என்றும் அழியாத முத்தியாகிய வீட்டுலக வாழ்வை யுமல்லவா பெறுவார்கள்?*

(பல கோடி என்றது எண்ணற்றது என்ற பொருளே உடையது. செல்வமோ என்றது, செல்வம் மட்டுமா என்னும் பொருள் உடையது வீடும் பெறுவார் அன்ருே என்று கூட்டியுரைக்க, பண் அளிக்கும்-பண்ணேப்போன்ற, பண்-ராகம்; அளிக்கும் : உவமவாசகம். சொல்லையுடைய கிளி, பரிமள யாமளேக் கிளி என்று கூட்டுக!

அம்பிகையை உபாசிப்பவர்கள் இம்மை மறுமை வீடு களைப் பெறுவார்கள் என்பது கருத்து.

--- இது அபிராமி அந்தாதி 15ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/160&oldid=546316" இலிருந்து மீள்விக்கப்பட்டது