பக்கம்:எழில் உதயம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16t) எழில் உதயம்

தோன்றியது. தோல்வியுற்றவர்கள் வெற்றி அடைந்தவர் களேத் துதிப்பது வழக்கம். அவ்வாறே எந்தத் தாமரையும் அம்பிகையின் திருமுகத்துக்கு ஒப்பாகாமல் தோல்வி யுற்றது. இப்போது எல்லாத் தாமரைகளும் தம்மை வெற்றி கொண்ட திருமுகத்தைத் துதிக்கின்றன. இந்தப் பக்தரின் காதுக்கு அந்தத் துதி கேட்கிறது போலும்! இப்போது உற்சாகமாக அம்பிகையின் ஆனனத்தைப் பாராட்டுகிரு.ர்.

அரவிந்தம் எல்லாம் துதி சய ஆணனம். ஆம்! இந்த அழகிய முகத் தாமரையைக் தாங்கி யிருக்கும் பெருமாட்டியும் கொடி போலவே ஒளிர்கிருள். மென்கொடிபோன்ற அவள் திருமேனியின் மேலே விட்டு விளங்கும் மலர் அவள் திருமுகம். அந்தச் சுந்தரவல்லியிற் பூத்த ஆண்னமாகிய மலரை எல்லாத் தாமரைகளும் துதிக்கின்றன.

அரவிந்தம் எல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி. முகத்துக்கு உவமை தேடி அலைந்து கடைசியில் ஒருவாறு உவமைப் பொருளே வென்று நிற்கும் பேரெழிலைச் சொன்ன ஆசிரியருக்கு, இனி அங்கங்களை வருணிப்பது இப்போது சாத்தியம் அன்று என்ற எண்ணம் வந்து விட்டது. - . x

ஆயினும் அதிசயமான வடிவுடையாள் என்று தொடங்கி ஆனனத்தின் ஜயத்தை மட்டும் சொல்லி நின்றுவிட்டால் அது தன்ருக இருக்குமா? அந்த உண்மையை நிறுவவேண்டுமே! வருணனையினல் அதை நிரூபிக்கும். ஆற்றல் யாருக்கும் இல்லை. -

ஒரு பொருளின் பெருமையை அதனுல் உண்டாகும் விளைவினல் தெரிந்து கொள்ளலாம். அம்பிகையின் அழகின் சிறப்பையும் அந்த வகையில் சொல்லிப் பார்க்கலாம்

என்று ஒரு நினைவு எழுந்தது. . . . . • ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/168&oldid=546324" இலிருந்து மீள்விக்கப்பட்டது