பக்கம்:எழில் உதயம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 எழில் உதயம்

அவள், ஒரிடத்திலிருந்து ஒரிடத்துக்குப் போகாதவள்; அவள் எங்கும் இருப்பவளாதலின் இந்தச் சலனம் அவளுக்கு இல்லை. அப்படியே காலத்திலுைம் சலனம் இல்லாதவள்; அசலை. -

அவள் நித்திய மங்கலை, எப்போதும் மங்கலம் குறை யாமல் இருக்கிறவள். மங்களாக்ருதி, ஸுமங்கலி என் பவை அவளுடைய திவ்யத் திருநாமங்கள்.

எங்கும் நிறைந்த பூரணை, சலனம் இல்லாத அசலை, என்றும் மங்கலத்தோடிருக்கும் மங்கலே என்றஇந்த மூன்றை யும் இணைத்துக் கடைசியில் அம்பிகையை விளிக்கிரு.ர்.

பூரணுசல மங்கலையே!

பூரணமங்கலை, அசலமங்கலை என்று"கூட்டியும் பொருள் கொள்ளலாம். அசலமங்கலை என்பதற்கு மலைராஜனுக் கிருகண் மணியாய் உதித்துமலை வளர் காதலிப்பெண்” ளுகிய பார்வதி என்று பொருள் கொள்வதும் பொருந்தும்,

உறைகின்ற கின்திருக் கோயில்கின்

கேள்வர் ஒருபக்கமோ? அறைகின்ற நான்மறை யின் அடி யோ?முடி யோ? அமுதம் நிறைகின்ற வெண்திங்க ளோகஞ்ச மோ? என்றன் நெஞ்சகமோ? மறைகின்ற வாரிதி யோரிபூர ளுசல மங்கலையே!

(எங்கும் நிறைந்தவளாயும் தளர்ச்சியற்றவளாயும் நிறைந்த மங்கலம் உடையவளாயும் உள்ள அபிராமி அன்னையே, நீ எழுந்தருளியிருக்கின்ற நின்னுடைய அழகிய கோயில், நின் பிராண நாதராகிய சிவபிரானுடைய ஒரு பக்கமாகிய வாமபாகமோ? உன் புகழைச் சொல்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/194&oldid=546349" இலிருந்து மீள்விக்கப்பட்டது