பக்கம்:எழில் உதயம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவும் உண்ணமும் 191

லலிதா சகசிரகாமத்தில் வரும் திருநாமங்களால் தேவிக்கும் கலைகளுக்கும் உள்ள தொடர்பு நன்கு விளங்கும்.

கலா என்பது மயிலின் தோகைக்கும் பெயர். ஆதலின் அதனோடு சேர்த்து மயில் என்ருர். 'கலாமயிற் கூத்தயர் குளிர்புனம்' (மீளுட்சி பிள்ளைத் தமிழ்.)

இத்தகைய அன்ன சிவபெருமானுடைய திருமேனியில் ஒரு பக்கத்தை உரிமையோடும் பெற்று ஆளுகிருள். அவர் தம் தலையில் கங்கையைத் தரித்திருந்தாலும் அதனல் கோபம் கொள்ளாமல் அவரிடத்தினின்றும் நீங்காமல் இருக்கிருள்.

கங்கை எத்தகையது? "என்னைத் தாங்குவார் யார்?’’ என்ற அகந்தையோடு தாவி வந்தது; அலைகள் பொங்க ஆரவாரித்து வந்தது. அப்படி வந்தாலும் இறைவருடைய சடையிலே அது அடங்கித் தங்கியது.

'விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்

மண்ணுக் கடங்காமல் வந்தாலும்-பெண்ணே இடத்திலே வைத்தஇறைவர்தம் சடாம குடத்திலே கங்கையடங் கும்’ என்று பாடினர் காளமேகப் புலவர். தாவி வந்த கங்கையி னிடம் பொங்கிய அலைகளெல்லாம் இறைவருடைய புரிந்த சடை ஒன்றில் அமைந்து, அலையாமல் பொங்காமல் தங்கி விட்டன. அதனல்,

தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் என்கிருர் அபிராமிபட்டர். அத்தகைய இறைவருடைய ஒரு பக்கத்தில் இருந்து ஆளுகின்ருளாம் தேவி.

‘. . . . தாவுகங்கை பொங்கல தங்கும் புரிசடையோன்புடை

ஆளுடையாள். . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/199&oldid=546354" இலிருந்து மீள்விக்கப்பட்டது