முன்னுரை
பல ஆண்டுகளுக்கு முன் திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்தின் அதிபர் பூரீலழரீ அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் அபிராமி அந்தாதிக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்று பணித்தார்கள். அவர்கள் திருவுள்ளப் படியே முதலில் அப்பதிப்பு, காசிமடத்தின் வெளியீடாக வந்தது. பிறகு இரண்டாம் பதிப் பும் வெளியாயிற்று. மூன்ரும் பதிப்பு அமுத நிலைய வெளியீடாக மலர்ந்தது. அந்த நூலுக்கு உரை எழுதும்போது பூரீ வித்யா சம்பந்தமான நூல்களைப் படித்தும் உபாசகர்களோடு பழகியும் பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன்.
என்னுடைய ஆசிரியப்பிரானகிய டாக்டர் மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் தக்கயாகப் பரணியைப் பதிப்பித்தபோது அம்பிகையின் சம்பந்தமான பல நூல்களைப் படிக்கும் செவ்வி கிடைத்தது. அதன் பின்பு அபிராமியந்தாதிக்கு உரை எழுதும்போது அந்தத் துறையில் பின்னும் ஆராய்ச்சி செய்யும் அவசியம் உண்டாயிற்று. பிறகு பூரீ சிருங்ககிரி ஜகத்குரு பூர் சங்கராசாரிய ஸ்வாமிகளின் ஆதரவில் சங்கரகிருபா என்ற பத்திரிகையை வெளியிடத் தொடங்கினர்கள்.