பக்கம்:எழில் உதயம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிபுர சுந்தரி 39.

பவை. இந்த நான்கையும் வைத்திருப்பதனால் நான்கு திருநாமங்கள் அம்பிகைக்கு அமைந்தன. அவை, பஞ்ச தன்மாத்ர லாயகா (11), மனே ரூபேகடி கோதண்டா (10), ராகஸ்வரூப பாசாட்யா (8) க்ரோதாகாராங்கு சோஜ்வலா (9) என்று லலிதா சகசிரநாமத்தில் வருகின்றன. -

இந்த நான்கு படைகளும் சிலவற்றைக் குறிக்கும் அடையாளப் பொருள்கள் என்பதை இந்தத் திருநாமங் கள் புலப்படுத்துகின்றன. செங்கரும்பாகிய வில் மனத் தைக் குறிக்கிறது. எண்ணுதலையும், அதனை ஒழிதலையும் உடைய மனத்தையே அம்மை வில்லாக ஏந்தியிருக்கிருள். மனம் இந்திரியங்களின் வாயிலாக நுகர்ச்சியைப் பெறு கிறது; இந்திரியங்களால் நுகரப்படுபவற்றைப் புலன்கள் என்பார்கள். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தும் ஐம்பொறிகளால் நுகரப்படுவன; இவற்றைத் தன்மாத்திரைகள் என்று வடமொழியில் கூறுவர். இவை களே அம்பிகையின் திருக்கரத்தில் கணைகளாக உள்ளன. அம்பிகையின் திருக்கரத்தில் உள்ள அங்குசம் குரோ தம் அல்லது வெறுப்பின் அடையாளம்; ராகம் அல்லது விருப்பின் உருவமாக அமைந்தது பாசம் அல்லது கயிறு. விருப்பு வெறுப்புக்களேயே பாசாங்குசமாகத் தரித்தவள் எம்பெருமாட்டி. -- ".

இந்த நான்குக்கும் அதிதேவதைகள் உண்டு. பாசத் துக்கு அதிஷ்டான தேவதை அச்வாருடை, அங்கு சத்துக்கு ஸ்ம்பத்கரி, கரும்பு வில்லுக்கு மந்த்ரிணி: மலர்ப் பூங்கணக்குத் தண்டநாதா என்ற வராகி. -

கரும்பு வில்லும் மலர்க்கணையும் உடையவன் காமன். அவற்றையே அம்பிகையும் கொண்டிருக்கிருள். செங் கரும்பை வில்லாகவும், தாமரை, மாம்பூ, அசோகமலர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/47&oldid=546204" இலிருந்து மீள்விக்கப்பட்டது