பக்கம்:எழில் உதயம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

அதஞசிரியராகிய பூர கே. ஆர். வேங்கடராமை யரவர்கள் அந்தப் பத்திரிகையில் தொடர்ந்து ஏதாவது எழுதி வரவேண்டுமென்று விரும்பினர் கள். அவர்கள் விருப்பப்படியே அபிராமி அந்தா திப் பாடல்களின் விளக்கத்தைக் கட்டுரை வடி வில் எழுதத் தொடங்கினேன். இன்னும் அந்தக் கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகிக்கொண் டிருக்கின்றன.

அவற்றைப் படித்தவர்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டி எழுதினர்கள். பலர் கட்டுரைகள் புத்தக வடிவில் வரவேண்டும் என்று தெரிவித் தார்கள். முழு நூலும் எழுதிய பிறகு வெளியிட லாமெனின் அது மிகவும் பெரிய புத்தகம் ஆகி விடும் என்று நினைத்து முதல் 25 பாடல்களின் விளக்கக் கட்டுரைகளை மட்டும் தொகுத்து, "எழில் உதயம்' என்ற பெயரில் இந்த உருவத் தில் வெளியிடலானேன். -

அபிராமி பட்டர் பூரீ வித்யா உபாசகர். தேவி சம்பந்தமான உண்மைகளே நன்கு உணர்ந் தவர். உண்மையான சாக்தர். ஆதலின் அவ ருடைய நூலுக்கு வேறு சம்பிரதாயப்படி உரை வகுப்பது பொருத்தம் ஆகாது. எனவே, படித்தும் கேட்டும் அறிந்த தேவி சம்பந்தமான கருத்துக்களைக் கொண்டு இந்தப் பாடல்களுக்கு விளக்கம் எழுதத் தொடங்கினேன். தேவி உபா சனத் துறையில் பெரும் பயிற்சி பெருதவன் எளியேன். அந்த உபாசனை விரிவானது; நுட்ப மானது. எனினும் பூர் ஷண்முக நாதனுடைய திருவருளைத் துணையாகக் கொண்டு விளக்கம் எழுதத் தொடங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/5&oldid=546162" இலிருந்து மீள்விக்கப்பட்டது