பக்கம்:எழில் உதயம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 எழில் உதயம்

நிலை உன்மணி அல்லது மனோன்மணியாகும். அவ் விடத்தே உறைதலின் அன்னைக்கு மனேன்மணியென்ற திருநாமம் வந்தது என்பது ஒரு சாரார் கொள்கை. மனம் பற்றற்றுச் சலனமற்று இயங்காமல் நிற்கும். நிலை உன்மணி என்று கூறுவர். அந்த மைேலயத்தை அருளுவதனால் இந்தத் திருநாமம் வந்தது என்று சொல்வதும் பொருந்தும் .

அடுத்தபடி, அம்பிகை செய்த திருவிளையாடல் ஒன்றைச் சொல்ல வருகிரு.ர். முப்பத்து முக்கோடி தேவர்களும் அமுதம் கடைந்தார்கள். அப்போது அவர் கள் சிவபெருமானை எண்ணவில்லை அங்கு முதலில் உச்சைசிரவம், ஐராவதம் முதலிய பொருள்கள் வந்தன. அவற்றைத் தேவர்களிற் சிலர் தங்களுக்கென்று எடுத்துக் கொண்டனர். இன்னும் 'அமுதம் தோன்றவில்லை. ஆனல் ஆலகால நஞ்சு தோன்றியது. அதனைக் கண்ட அமரர் அஞ்சி நடுங்கினர்; அமுதம் வராமல் இருந்தாலும் இருக்கட்டும். இந்த நஞ்சு நம்மை அழிக்காமல் இருக்க வேண்டுமே!’ என்று மனம் குலைந்து வருந்தினர். அப் போதுதான் அவர்களுக்குச் சிவபெருமானின் நினைவு வந்தது. அவனிடம் ஒடிச் சென்று தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று அடியில் வீழ்ந்து புலம்பினர். இறைவன் அந்த நஞ்சை வாங்கி உண்டான். புறத்திலே உள்ள தேவர்கள் அழியாமல் இருக்க அதனை எடுத்து விழுங்

ஆனல், அவன் திருவயிற்றுள் எத்தனையோ கோடி அண்டங்கள் உள்ளனவே! உள்ளே சென்று அவற்றை அழித்துவிட்டால் என் செய்வது? இந்த எண்ணம் அம்பிகைக்கு உண்டாயிற்று. இறைவன் நஞ்சை விழுங்கத் தொடங்கியவுடன் பிராட்டி தன் கரத்தால் இறைவன் கழுத்தை அணைத்துக்கொண்டாள். அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/70&oldid=546227" இலிருந்து மீள்விக்கப்பட்டது