அழியாத கன்னிகை 83
என்பது சிலப்பதிகாரம்.
கொதியாது கொதித்தெழுந்த
கோட்டெருமைத் தலையின்மிசை மிதியாத சீறடி மிதித்தனபோல் தோன்ற'
என்பது ஒரு பழம் பாடல்.
அந்தரி என்பது அம்பிகையின் திருநாமம். அந்தரம் என்பது ஆகாசமாதலின் ஆகாச வடிவினள் என்னும்
பொருள் உடையது அது; வானந்த மாண வடிவுடை யாள்” என்று இவ்வந்தாதியில் வரும்.
மகிஷாசுர மர்த்தனியாகிய துர்க்கையின் கோலத்தை நினைந்தவுடன்,
நீலி
ಸ್ಥDI கூறுகிரு.ர். நீலி என்பது துர்க்கையின் பெயர்; காளி என்றும் கூறலாம்.
. 'சங்கரி அந்தரி நீலி' என்பது சிலப்பதிகாரம். -
நீல நிறத்துடன் மகிஷாசுர மர்த்தனியாக நின்ற அம்பிகையின் திருக்கோலத்தை எண்ணினவர், எல்லாப் பொருளும் அழிந்தாலும் தான் அழியாத கன்னிகையாக இருப்பதை நினைக்கிருர். x
அழியாத கன்னிகை. அம்பிகை உலகத்துக்கெல்லாம் அன்னையாயினும் அவள் என்றும் கன்னிகையாக இருப்பவள். அவள் அழியா தவள்; அவள் கன்னித் தன்மையும் அழியாதது. ஆதலின் அழியாத கன்னிகை என்பதற்கு அழியாதவளாகிய கன்னி கை என்றும், அழியாத கன்னித் தன்மையையுடையவள் என்றும் பொருள் கொள்ளலாம்.