பக்கம்:எழில் விருத்தம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3() வாணிதாசன் வெள்ள மாக மக்களெலாம் விரும்பி விரும்பி உனைச்சுற்றி உள்ளே சுழலும் படியூடே உன்மேல் ஏறிச் சுழல்விளக்கே ! கொள்ளும் இன்பம் என்னாங்கொல்? குன்றை ஊரை நீள்கடலை அள்ளும் காற்று வெளியிருந்தே - அழகு படுத்திக் காட்டுவதோ? 9 சுங்கம் வாங்கும் கடலோரத் துறையில் சுழலும் சுழல்விளக்கே ! எங்கெங் கிருந்தோ வந்தாலும் எந்தக் கப்பல் ஆனாலும் கங்குல் கிழித்து வழிகாட்டிக் கரையை உணர்த்தும் மேலான தங்கக் குணத்துக் கீடிந்தத் . தரையில் எதைநான் சொல்வேனே ! 10 "இருமா காய்ச்சி அரையடிக்காய் இவையே மற்றை அரையடிக்கும் வருமா றுணர்க' - - - என்னும் விருத்தப் பாவியல் நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். -