பக்கம்:எழில் விருத்தம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 5 எழில் விருத்தம் கற்றுணர்ந்த நல்லமைச்சைக் கவிபாடும் மேலோரைக் கணித நூலைப் பெற்றிருந்த முடிமன்னர் பெரு வாழ்வை அரசியலைப் பேணிக் காத்த சுற்றுமதிற் பெருங்கோட்டை நிலையெல்லாம் தொகைநூல்கள் சொல்லும்; மக்கள் கொற்றமிலாக் குறையாலோ நாட்டகத்துக் கோட்டைச்சீர் குறைந்த தந்தோ! 8 சிலைசுற்றித் தமிழ்காத்துத் திசையெட்டும் புகழ்நாட்டத் திண்டோள் வீரர் அலைசுற்றும் கடலாண்ட பழம்பெருமை நூலகத்தே அறிந்து கொண்டு மலைசுற்றும் படியேறித் தலைசுற்றி மலையுச்சி மன்னர் கோட்டை நிலைசுற்றிப் பார்க்கையிலே தாயகத்தின் நினைப்பினிலே நெஞ்சம் வேகும் !